Don't Miss!
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பெண் போட்டியாளர்கள் எல்லாம் ஆப்பிளாம்? அதுல மகத் தேர்ந்தெடுத்த ரெண்டு ஆப்பிள் யார் தெரியுமா?
சென்னை: பெண் போட்டியாளர்களை மட்டும் 8 ஆப்பிள் என மகத் சொன்னதை கேட்டு வெளியே ஒரு சர்ச்சையே வெடித்து வருகிறது.
லக்சரி டாஸ்க் பூஜ்ஜியம் புள்ளிகளுடன் புஸ்வாணமாக போன நிலையில், அடுத்து தீபாவளி டாஸ்க்குகளுடன் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் அகம் டிவி வழியே வந்து போட்டியாளர்களுக்கு டார்ச்சர் கொடுத்தனர்.
முதல் ஆளாக டிவியில் தோன்றிய மகத் ஷிவானி மற்றும் சம்யுக்தாவை டாஸ்க்குக்காக தேர்வு செய்தார்.
செய்றதையும் செஞ்சிட்டு.. எப்படி பேசுறான் பாரு.. பாலாவை பார்த்து நக்கலடிக்கும் பிக் பாஸ் ரசிகர்கள்!
பெண் போட்டியாளர்கள் ஆப்பிளா?
பிக் பாஸ் வீட்டின் 8 பெண் போட்டியாளர்களை பார்த்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 போட்டியாளரான மகத், ஆப்பிள்கள் என கூறியது சமூக வலைதளங்களில் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள், பெண்களை ஆப்பிள்களுடன் ஒப்பிட்டு எப்படி டபுள் மீனிங்கில் பேசலாம் என மகத்தை வச்சு செய்து வருகின்றனர். மேலும், சுச்சியை பார்த்தால், உனக்கு ஆப்பிள் மாதிரியா தெரியுது என கலாய்த்தும் வருகின்றனர்.
ரெண்டு ஆப்பிள்கள்
ஆப்பிள்கள் டாஸ்க் கொண்டு வந்த நிலையில், நடிகர் மகத் அப்படி சொன்னார் என்று, இன்னமும் அவருடைய ரசிகர்களாக இருக்கும் சில பிக் பாஸ் ரசிகர்கள் முட்டுக் கொடுத்து வருகின்றனர். டிவி வழியே போட்டியாளர்களிடம் பேசிய மகத், நேரம் கடத்தாமல் வந்த உடனே டாஸ்க்குக்குள் சென்று விட்டார். 8 ஆப்பிளில் ரெண்டு ஆப்பிளான ஷிவானி மற்றும் சம்யுக்தா வாங்க என்றார்.
தண்ணிக்குள்ள மூஞ்ச விட்டு
ஷிவானி மற்றும் டம்மி மம்மி சம்யுக்தாவுக்கு தண்ணிக்குள் இருக்கும் ஆப்பிளை சாப்ப்பிட வேண்டும் என்கிற செம டஃப் ஆன போட்டி கொடுக்கப்பட்டது. தண்ணிக்குள்ள மூஞ்ச விட்டு, ஷிவானியும் சம்யுக்தாவும் ஆப்பிளை சாப்பிடும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல அப்படி இருக்கிறது.
கச்சிதமாய் கட் பண்ண எடிட்டர்
ஷிவானி போட்டுருக்க ரெட் டிரெஸ்ல குனிஞ்சு ஆப்பிளை சாப்பிட்டால், பிக் பாஸ் ரசிகர்களுக்கு வேற ஒரு கவர்ச்சி விருந்து கிடைத்து விடும் என தெரிந்து கொண்ட பிக் பாஸ் எடிட்டர், சம்யுக்தாவையே அதிகளவு ஃபோகஸ் செய்தும், லாங் ஷாட்களை வைத்துமே அந்த போட்டியை கச்சிதமாய் கட் பண்ணிட்டார்.
திங்கறதுல கூட ஜெயிக்கல
வெறும் ஆப்பிளை தின்னும் போட்டியில் கூட பர்கர் தின்னி ஷிவானியால் ஜெயிக்க முடியவில்லை என பிக் பாஸ் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்துத் தள்ளினர். ஆனால், ஷிவானி ஆர்மியினரோ, தனது பிக் பாஸ் வீட்டு மம்மிக்காகத் தான் ஷிவானி இந்த டாஸ்க்கை விட்டுக் கொடுத்தார் என்றும் கூறி பாராட்டி வருகின்றனர். வெற்றி பெற்ற சம்யுக்தாவுக்கு ஒரு சூப்பர் பரிசும் கிடைத்தது.