Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மெளனமான நேரம்.. அந்த ஜெயப்ரதா இப்ப எப்படி நடிக்கப் போறாங்க தெரியமா??
சென்னை : 'மன்மதலீலை', 'நினைத்தாலே இனிக்கும்', 'சலங்கை ஒலி' உள்பட ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் ஜெயப்பிரதா. கடைசியாகத் தமிழில், 'தசாவதாரம்' படத்தில் நடித்தார்.
இந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெயப்பிரதா அரசியலில் குதித்து பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
இப்போது அவர் அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
மீண்டும் சினிமாவில் :
6 வருடங்களுக்குப் பிறகு தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள 'யாகம்' என்ற படத்தில் நடித்துள்ளார் ஜெயப்பிரதா. இதில் அவர் புதுமுக ஹீரோ ஆகாஷ்குமாரின் தாயாக நடித்துள்ளார். நாசர், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், நெப்போலியன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஷங்கரின் உதவியாளர் என்.நரசிம்மா இப்படத்தை இயக்கி இருக்கிறார்.
நெப்போலியன் ஜோடி :
'அரசியலுக்கு சென்று விட்டு மீண்டும் சினிமாவுக்கு திரும்பி இருக்கும் நானும், நெப்போலியனும் இதில் ஜோடியாக நடித்திருக்கிறோம். மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தபோது இயக்குனர் நரசிம்மா இந்தக் கதையை என்னிடம் கூறினார். அவர் கதை சொன்னவிதமும் பிடித்திருந்தது.
தாய் - மகன் அன்பு :
ஒரு தாய்க்கும், மகனுக்குமான அன்பைச் சொல்லும் படம். இன்னொரு புறம் ஃபேன்டசி கதையாகவும் இருக்கும். தீய சக்திகளிடமிருந்து மகனைக் காக்கப் போராடும் காட்சியில் மிகவும் சிரமப்பட்டு நடித்தேன்.
தமிழில் நடிப்பதே மகிழ்ச்சி :
பல மொழிகளிலும் நடித்திருந்தாலும் தமிழில் நடிக்கும்போது தனி சந்தோஷம் இருக்கும். நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன்' எனப் பட விழாவில் கூறியிருக்கிறார் ஜெயப்பிரதா.