Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
என் மீது பொய் வழக்கு போட்டுள்ளார் இமான்.. இரண்டாம் திருமணத்திற்கு பிறகு வெளியான உண்மை !
சென்னை : இசையமைப்பாளர் டி இமான், என் மீது பொய் வழக்கு போட்டார் என்று அவரது முன்னாள் மனைவி மோனிகா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான் ரஜினி, அஜித், விஜய் என சூப்பர் ஸ்டார்களுக்கு இசையமைத்துள்ளார்.
டி.இமான், விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றிருந்த கண்ணான கண்ணே பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
ஆலுமா டோலுமா பாடலுக்கு நிக்கியுடன் ஆட்டம் போட்ட ஆதி.. அட்டகாசமாக ஆரம்பமான திருமண நிகழ்ச்சி!
இசையமைப்பாளர் டி.இமான்
இசையமைப்பாளர் டி.இமானுக்கும் மோனிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். மனைவியை விட்டு பிரிந்தாலும் குழந்தைகளை சந்திக்க இமானுக்கு குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இரு குழந்தைகளின் பாஸ்போர்ட்களையும் இமான் வைத்திருந்தார். இந்நிலையில், குழந்தைகளின் பாஸ்போர்ட்கள் தொலைந்து விட்டதாக தவறான தகவலை கூறி, புதிய பாஸ்போர்ட் பெற்ற முன்னாள் மனைவி மோனிகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இமான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இரண்டாவது திருமணம்
இதையடுத்து,கடந்த வாரம் சத்தமே இல்லாமல் கோலிவுட் நடிகர் உபால்டின் மகள் அமெலியாவை இசையமைப்பாளர் டி இமான் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
Recommended Video
என் மீது பொய் வழக்கு போடுகிறார்
இதையடுத்து, இமானின் முன்னாள் மனைவி மோனிகா, இசையமைப்பாளர் இமான், தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி என் மீது பொய் வழக்கு போட்டு இருப்பதாக கூறியுள்ளார். இமானிடம், குழந்தைகளின் பாஸ்போர்ட்டை தரும்படி கேட்டபோது, வீடு மாறும் போது அவை, தொலைத்துவிட்டதாக கூறினார் என்றும், அதன் பிறகே புதிய பாஸ்போர்ட்டை பெற விண்ணப்பித்ததாக கூறியுள்ளார். மோனிகா கூறியுள்ள தகவலால் இமானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.