Don't Miss!
- News வாய்தா மேல் வாய்தா! நடிகை விஜயலட்சுமி ஏப்ரல் 2ல் ஆஜராக அவகாசம்.. சீமான் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
குழந்தைகளுக்கு தற்காப்பு கலை கற்பிக்கும் 'எழுமின்'.... பட்டய கிளப்பும் டிரெயலர்
காமெடி நடிகர் விவேக் நடிப்பில் உருவாகியுள்ள 'எழுமின்' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: காமெடி நடிகர் விவேக் கதையின் நாயகனாக நடித்துள்ள எழுமின் படத்தின் டிரெய்லரை நடிகர் சிம்பு வெளியிட்டார்.
வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கியுள்ள படம் எழுமின். நடிகர் விவேக், நடிகை தேவயானி உள்ளிட்டோர் ஆறு சிறுவர்களுடன் சேர்ந்து நடித்துள்ள இந்த படம், தற்காப்பு கலையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. விளையாட்டு துறையில் நடக்கும் அரசியலையும் இப்படம் பேசுகிறது.
இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. நடிகர்கள் சிம்பு, விஷால், கார்த்தி, விவேக், உதயா,அழகம்பெருமாள், நடிகை தேவயானி, இயக்குனர் விஜி உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.
நடிகர் சிம்பு டிரெய்லரை வெளியிட்டார். படத்தில் நடித்துள்ள சிறுவர்கள் விழா மேடையில் தற்காப்பு கலைகளை நிகழ்த்தி காட்டினர். நடிகர் விஷால் இதனை கொடியசைத்து துவக்கி வைத்தார். படக்குழு சார்பில் திருப்பத்தூர் வீரவிளையாட்டு கலைக் கூடத்துக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை நடிகர் கார்த்தி அவர்களிடம் வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், தன் பங்களிப்பாக திருப்பத்தூர் வீரவிளையாட்டு கலைக் கூடத்துக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்குவதாக அறிவித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, " இந்த படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்றைய குழந்தைகள் சினிமாவை நோக்கி தான் பயணப்படுகிறார்கள். எந்த பள்ளி, கல்லூரி விழாவுக்கு சென்றாலும், சினிமா பாட்டு, டான்ஸ் தான்.
ஆனால் இன்று இயக்குனர் விஜி இந்த படத்தை எடுத்திருப்பது, அவசியம் என்று நினைக்கிறேன். இந்த படத்தை எனது மகளை அழைத்துச் சென்று காட்டுவேன். அவளும் மார்சியல் ஆர்ட்ஸ் பயில்கிறாள். இன்றைய சூழலுக்கு தற்காப்பு கலை மிகவும் அவசியம். ஏனென்றால், ரோடில் போகும் போது, யாராவது செயினை பறித்துச் சென்றால், திருப்பி தாக்க வேண்டும். அதற்கான தன்னம்பிக்கையை தற்காப்பு கலை நமக்கு கொடுக்கும்"
இவ்வாறு நடிகர் கார்த்தி பேசினார்.
படத்தில் நடித்துள்ள சிறுவர்கள் அனைவரும் உண்மையில் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவர்கள். இசை வெளியீட்டுக்கு பின்னர் படம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.