Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வீட்டில் கள்ளநோட்டு அடித்த டிவி சீரியல் நடிகை, தாய், தங்கை கைது: ரூ. 57 லட்சம் பறிமுதல்
Recommended Video
திருவனந்தபுரம்: கொல்லத்தில் வீட்டில் வைத்து கள்ளநோட்டு அடித்த மலையாள டிவி சீரியல் நடிகை, அவரது தாய், சகோதரி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் சூர்யா சசிகுமார்(36). கொல்லத்தில் தனது தாய் ரமா தேவி(56), தங்கை ஸ்ருதி(29) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
சூர்யா தனது வீட்டின் மாடிப் பகுதியில் கள்ள நோட்டு அடித்து வந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
தகவல்
ஆனக்கரா பகுதியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கிருஷ்ணகுமார், லியோ சாம், ரவீந்திரன் உள்ளிட்டோரை கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் போலீசார் சூர்யாவின் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
பறிமுதல்
சூர்யாவின் வீட்டில் இருந்த ரூ. 57 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கள்ள நோட்டுகள் அடிக்க அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
தாய்
கள்ள நோட்டுகள் அடித்த குற்றத்திற்காக சூர்யா, ரமா தேவி, ஸ்ருதி ஆகியோரை போலீசார் கடந்த 3ம் தேதி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரமா
கள்ள நோட்டு அடித்ததில் முக்கிய மூளையாக ரமா தேவி செயல்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கள்ள நோட்டுகளை அச்சடிக்க தேவையான எந்திரங்களை வாங்க ரமா ரூ. 4.36 லட்சம் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.
போலீஸ்
அச்சடித்தும் அடிக்காமலும் இருந்த நோட்டுகள், நோட்டுகளை அடிக்கத் தேவையான பொருட்கள் என்று பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மதிப்பு ரூ. 7 கோடி என்று போலீஸ் அதிகாரி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.