நடிகர், நடிகைகள் பெயரில் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்… உஷார் ரிப்போர்ட்

By Mayura Akilan

தமிழ் சினிமா நடிகர்கள், நடிகையர்கள் பெயரில் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்கள் தொடங்கப்பட்டு உலா வருகின்றன. அவற்றை உண்மை என்று நம்பி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்கின்றனராம்.

அமலாபால், அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோரின் பெயரிலும், நான் ஈ வில்லன் சுதீப்பின் பெயரிலும் கூட பல போலி அக்கவுண்டுகள் தொடங்கப்பட்டு பல தகவல்கள் அப்லோட் செய்யப்படுகின்றனவாம்.

இதனால் அதிர்ந்து போயுள்ளனர் நடிகர், நடிகைகள். சுதீப் ஃபேஸ்புக் பக்கத்தில் முதல்வர் ஜெயலலிதா குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றது. இது சர்ச்சையை ஏற்படுத்தவே அது குறித்து விசாரித்த போலீசார், அது போலி என தெரிந்து கொண்டனர். உடனடியாக சுதீப் பிரஸ்மீட் வைத்து விளக்கம் சொல்லவேண்டியதாயிற்று.

அமலபால் 31

அமலபால் 31

அமலாபால் பெயரில் 31 ஃபேஸ்புக் அக்கவுண்ட்கள் தொடங்கப்பட்டுள்ளதாம். இந்த சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி தவறாக எதுவும் செய்தி வெளியிடாத காரணத்தால் அவற்றை கண்டு கொள்ளலாமல் விட்டு விட்டதாக கூறியுள்ளார் அமலாபால்.

அனுஷ்கா ஷெட்டிதான்

அனுஷ்கா ஷெட்டிதான்

அனுஷ்கா பெயரிலும் எக்கச்சக்க போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் அனுஷ்கா ஷெட்டி என்ற பெயரில் உள்ளது மட்டுமே உண்மையானதாம்.

ஸ்ருதி ஹாசனுக்கு 21

ஸ்ருதி ஹாசனுக்கு 21

ஸ்ருதிஹாசன் பெயரில் 21 ஃபேஸ்புக் அக்கவுண்ட்கள் உள்ளனவாம். ஆனால் உண்மையில் ஸ்ருதிஹாசன் டுவிட்டரில் மட்டுமே இருக்கிறாராம். ஃபேஸ்புக்கில் கிடையாதாம்.

நயன்தாராவிற்கு ஆறுதல்

நயன்தாராவிற்கு ஆறுதல்

குயின் நயன்தாரா என்ற பெயரில் போலி அக்கவுண்ட் உள்ளது. இதில் உள்ள பதிவுகளை பார்த்து பலரும் அவருக்கு ஆறுதல் சொல்கின்றனராம். தவிர பட வாய்ப்பு தருவதாகவும் கூறவே அதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று கூறி வருகிறார் நயன்தாரா.

அலரும் ஹன்சிகா

அலரும் ஹன்சிகா

பெரும்பாலான நடிகைகள் போலி அக்கவுண்ட்களை தொடங்கிய நபர்கள், ஹன்சிகாவின் ஃபேஸ்புக் பக்கத்திற்குள் நுழைந்து யூசர் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றை மாற்றி விளையாட ஆரம்பித்துவிட்டனர். இதனால் அவசரம் அவசரமாக வேறு ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கியுள்ளார்.

சசிகுமார் பெயரில் இ.மெயில் ஐ.டி

சசிகுமார் பெயரில் இ.மெயில் ஐ.டி

இந்த விவாகாரத்தை எல்லாம் விட நடிகரும், இயக்குநருமான சசிகுமாரின் பெயரில் இ.மெயில் ஐ.டி தொடங்கி பலருக்கும் மோசடியாக மெயில் அனுப்புகின்றனராம். நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பலருக்கு அழைப்பு போகிறதாம். இதை அறிந்து போலீசில் புகார் கொடுத்துள்ளார் சசிகுமார்.

சமூக வலைத்தளங்களில்

சமூக வலைத்தளங்களில்

இதேபோல் சமூக வலைத்தளங்களில் சசிகுமார் பெயரை பயன்படுத்தி படங்களில் வாய்ப்பு தரப்படுவதாக தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதை நண்பர் கூறவே அதிர்ச்சியடைந்த சசி, தனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வரும் பெண்கள் உஷாராக இருக்கவேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X