Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
போலி நம்பர் பிளேட் வழக்கு: சிவகாசி நீதிமன்றத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் சரண்
பவர்ஸ்டார் சீனிவாசன் கடன் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் கமிஷன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பலர் மோசடி புகார் கொடுத்தனர். டெல்லி திகார் சிறையில் இருந்த பவர் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார்.
அதன் பிறகு வழக்கம்போல் படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டில் காரில் போலி நம்பர் பிளேட் பொருத்தி சிவகாசியில் பயணம் செய்ததாக பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அவர் மீது சிவகாசி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது பவர்ஸ்டார் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பவர் முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரை சிவகாசி நீதிமன்றத்தில் சரண் அடைந்து பிடிவாரண்ட் உத்தரவை வாபஸ் பெறக் கோரி மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. மேலும் அந்த மனுவை தாக்கல் செய்த தினமே பரிசீலனை செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து பவர்ஸ்டார் இன்று காலை சிவகாசி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.