Don't Miss!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சினிமா வாய்ப்பு.... போலிகளை நம்பி பெண்கள் ஏமாறவேண்டாம் - இயக்குநர் சசிகுமார்
சசிகுமாரின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்புத் தருவதாகச் சொல்லி, போலி ஈ-மெயில் முகவரிகளை வைத்தும், வலைத் தளங்களை வைத்தும் சிலர் மோசடி செய்து வருகிறார்களாம். இதுபற்றி ஏற்கெனவே ஒருமுறை எச்சரித்திருந்தார் சசிகுமார்.
இப்போது மீண்டும் அத்தகைய மோசடிகள் அரங்கேறி வருவதால், மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "சினிமா என்ற பிரமாண்ட உலகை நோக்கி நாள்தோறும் பல ஆயிரக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளனர்.இது வரவேற்கத் தக்கதுதான். ஆனால் எப்படியாவது சினிமாவில் நுழைந்துவிட்டால் போதும் என்ற ஆர்வத்தில் போலிகளை நம்பி ஏமாந்துவிடுவது வருத்தமளிக்கிறது.
சமீபத்தில் என் பெயரைச் சொல்லி சிலர் சினிமா வாய்ப்புத் தருவதாக சிலரைத் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். எப்போதுமே என்னுடைய படங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போது நேரடியாக என் கம்பெனிக்கே அழைத்துப் பேசுவதுதான் வழக்கம். போனிலோ, ஈ மெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ளும் வழக்கம் கிடையாது.
என் பெயரில் போலி ஈ மெயில் முகவரிகளையும், பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளையும் சிலர் ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதுநாள் வரை எந்த சமூக வலைத் தளங்களிலும் நான் இல்லை. அதனால் வலைத் தளத் தகவல்களையோ, ஈ மெயில்களை வைத்தோ என் படத்தில் வாய்ப்பு கொடுப்பதாக சொல்லப்படுவதை யாரும் நம்ப வேண்டாம்.
குறிப்பாக , சினிமாவை நோக்கி வரும் பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். காரணம், சினிமா உலகம் எந்த அளவுக்கு அழகானதோ, அதே அளவுக்கு ஆபத்தானதும கூட.
சினிமாவை நோக்கி வருபவர்கள் ஜெயிக்கிறார்களோ, இல்லை போராடுகிறார்களோ, எந்த விதத்திலும் அவர்கள் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது என நினைப்பவன் நான்.
என்னுடைய பெயரை வைத்தே சிலர் ஏமாற்று வலை விரிப்பது, எனக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
என் பெயரை மட்டுமல்ல, வேறு யார் பெயரைச் சொல்லி வாய்ப்பு தருவதாகக் கூறி வலை விரித்தாலும் அதுகுறித்து தீர விசாரியுங்கள் என்பதே என் வேண்டுகோள். சினிமாவில் பெண்களின் சாதிப்புகளுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அந்த இலக்கை அடைவதற்கு ஆர்வமும் அவசரமும் மட்டுமே இருந்தால் போதாது, ஆராய்ந்து பார்க்கும் பக்குவமும் இருக்க வேண்டும்," என கூறியுள்ளார்.