Don't Miss!
- News செந்தில் பாலாஜி முதல் கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் எடுத்த ஆயுதத்தை வைத்தே அவர்களை காலி செய்யும் பாஜக
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சினிமா வாய்ப்பு.... போலிகளை நம்பி பெண்கள் ஏமாறவேண்டாம் - இயக்குநர் சசிகுமார்
சசிகுமாரின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்புத் தருவதாகச் சொல்லி, போலி ஈ-மெயில் முகவரிகளை வைத்தும், வலைத் தளங்களை வைத்தும் சிலர் மோசடி செய்து வருகிறார்களாம். இதுபற்றி ஏற்கெனவே ஒருமுறை எச்சரித்திருந்தார் சசிகுமார்.
இப்போது மீண்டும் அத்தகைய மோசடிகள் அரங்கேறி வருவதால், மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "சினிமா என்ற பிரமாண்ட உலகை நோக்கி நாள்தோறும் பல ஆயிரக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளனர்.இது வரவேற்கத் தக்கதுதான். ஆனால் எப்படியாவது சினிமாவில் நுழைந்துவிட்டால் போதும் என்ற ஆர்வத்தில் போலிகளை நம்பி ஏமாந்துவிடுவது வருத்தமளிக்கிறது.
சமீபத்தில் என் பெயரைச் சொல்லி சிலர் சினிமா வாய்ப்புத் தருவதாக சிலரைத் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். எப்போதுமே என்னுடைய படங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போது நேரடியாக என் கம்பெனிக்கே அழைத்துப் பேசுவதுதான் வழக்கம். போனிலோ, ஈ மெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ளும் வழக்கம் கிடையாது.
என் பெயரில் போலி ஈ மெயில் முகவரிகளையும், பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளையும் சிலர் ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதுநாள் வரை எந்த சமூக வலைத் தளங்களிலும் நான் இல்லை. அதனால் வலைத் தளத் தகவல்களையோ, ஈ மெயில்களை வைத்தோ என் படத்தில் வாய்ப்பு கொடுப்பதாக சொல்லப்படுவதை யாரும் நம்ப வேண்டாம்.
குறிப்பாக , சினிமாவை நோக்கி வரும் பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். காரணம், சினிமா உலகம் எந்த அளவுக்கு அழகானதோ, அதே அளவுக்கு ஆபத்தானதும கூட.
சினிமாவை நோக்கி வருபவர்கள் ஜெயிக்கிறார்களோ, இல்லை போராடுகிறார்களோ, எந்த விதத்திலும் அவர்கள் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது என நினைப்பவன் நான்.
என்னுடைய பெயரை வைத்தே சிலர் ஏமாற்று வலை விரிப்பது, எனக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
என் பெயரை மட்டுமல்ல, வேறு யார் பெயரைச் சொல்லி வாய்ப்பு தருவதாகக் கூறி வலை விரித்தாலும் அதுகுறித்து தீர விசாரியுங்கள் என்பதே என் வேண்டுகோள். சினிமாவில் பெண்களின் சாதிப்புகளுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அந்த இலக்கை அடைவதற்கு ஆர்வமும் அவசரமும் மட்டுமே இருந்தால் போதாது, ஆராய்ந்து பார்க்கும் பக்குவமும் இருக்க வேண்டும்," என கூறியுள்ளார்.