Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
'மேண்டலின்' சீனிவாசுக்கு விவாகரத்து: மனைவிக்கு ரூ10 லட்சம் ஜீவனாம்சம்!
மேண்டலின் இசைக் கலைஞர் சீனிவாஸ். இவருக்கும், ஸ்ரீ என்பவருக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
எனவே சென்னை குடும்பநல கோர்ட்டில் மேண்டலின் சீனிவாஸ் வழக்கு தாக்கல் செய்தார். அதில், 'மனைவி தன்னை மன ரீதியாக கொடுமைப்படுத்துவதாகவும், ஆந்திராவில் விஜிலன்ஸ் கமிஷனராக இருக்கும் அவரது தந்தையும் தன்னை மிரட்டுவதாகவும் அதில் சீனிவாஸ் கூறியிருந்தார்.
எனவே இந்த காரணங்களுக்காக தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கி உத்தரவிட வேண்டும் என்று வழக்கில் சீனிவாஸ் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை குடும்பநல கோர்ட்டு, சீனிவாஸ்- ஸ்ரீ தம்பதியினருக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீ மேல்முறையீட்டு மனு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவில், "கடந்த கால வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை குழியில் போட்டு மூடிவிட்டு, சீனிவாசும், ஸ்ரீயும் அடுத்ததாக புதுவாழ்க்கையை தொடங்க வாய்ப்பு இல்லை. ஏற்கனவே அவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொருவரையும் பிரிந்து தனியாகத்தான் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த காலகட்டத்தில் தங்கள் விருப்பம்போல் வாழ்க்கையை நடத்தியுள்ளனர். எனவே அவர்கள் மீண்டும் கணவன், மனைவியாக இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பு இல்லை. அவர்கள் பிரச்சினையின் முடிவுக்கு, விவாகரத்து மட்டும்தான் ஒரே நிவாரணமாக இருக்கும்.
குடும்பநல நீதிமன்ற உத்தரவின்படி, மனைவிக்கும், மகனுக்கும் ஜீவனாம்சமாக தலா ரூ.5 லட்சம் தொகையை சீனிவாஸ் கொடுத்துள்ளார். இந்த ஜீவனாம்ச தொகை மேலும் ரூ.5 லட்சம் அதிகரிக்கப்படுகிறது. அந்தத் தொகையை ஒரு மாதத்துக்குள் சீனிவாஸ் வழங்க வேண்டும்," என்று கூறினர்.