விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராக சௌந்தர்யாவுக்கு உத்தரவு
சென்னை: வவிவாகரத்து வழக்கில் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா நேரில் ஆஜராக வேண்டும் என குடும்ப நல நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்வதாக சௌந்தர்யா சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
சில தினங்களுக்கு முன் முறைப்படி விவாகரத்து பெறுவதற்கான விண்ணப்பத்தை சௌந்தர்யா மற்றும் அஸ்வின் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் ஜூன் 23ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது. அன்றைய தேதியில் சௌந்தர்யா மற்றும் அஸ்வின் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











