Don't Miss!
- News கரன்ட் இல்லாத நேரங்களிலும் இயங்குவதுதான் இன்வெர்ட்டர் ஏசியா?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியின் உருக்கமான பேச்சைக் கேட்டு பாராட்டிய பிரபல நடிகர்!
Recommended Video
சென்னை : விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலரையும் கவர்ந்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜலட்சுமி.
இவரும் இவரது கணவர் செந்தில் கணேஷும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடி வருகிறார்கள். நாட்டுபுற பாடல்கள் தான் இவர்களது ஸ்பெஷல்.
சமீபத்திய நிகழ்ச்சியில், ராஜலட்சுமி தனது குடும்பப் பின்னணி பற்றிப் பேச, அவரை ட்விட்டரில் பாராட்டியுள்ளார் நடிகர் மாதவன்.
ராஜலட்சுமி
கிராமியப் பாடல்கள் தான் தமிழர்களின் அடையாளம். கிராமியப் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவரும் நிலையில் தற்போது விஜய் டிவி-யில் கிராமியப் பாடல்களை மட்டுமே பாடி அசத்தி வருபவர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடி.
ரசிகர் பட்டாளம்
அழகான குரலில் பாடி தமிழுக்கும், கலைகளுக்கும் பெரும் சேர்த்து வருகிறார்கள் இவர்கள். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலக்கி வரும் இவர்களுக்கென பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகிவிட்டது.
குடும்ப பின்னணி
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தன்னுடைய அப்பா நெசவுத் தொழிலை செய்துதான் குடும்பத்தை காப்பாற்றினார் என்றார். என் அப்பாவிற்குப்பின் இந்தத் தொழில் அழிந்துவிடும் போல இருக்கிறது. எங்களுக்கு அந்தத் தொழில் தெரியாது, மிகவும் கஷ்டப்பட்டு தான் என் அப்பா எங்களை வளர்த்தார் எனப் பேசினார்.
பரிசு
அதோடு, இந்த நிகழ்ச்சியில் ராஜலட்சுமி கைத்தறி நெசவாளர்களைப் பற்றிய கிராமியப் பாடலைப் பாடினார். பின் கைத்தறி மூலமாக நெய்யப்பட்ட புடவைகளை அனுராதா மற்றும் ஸ்வேதா மோகனுக்கு கொடுக்க ஆசைப்படுவதாக கூறி அவர்களுக்கு புடவைகள் கொடுத்தார்.
|
மாதவன் பாராட்டு
தற்போது நடிகர் மாதவன் ராஜலட்சுமியின் திறமையை பார்த்துவிட்டு எளிமை, அற்புதம், பெருமையாக இருக்கிறது. இது தான் தமிழ்நாடு. இப்படியான உலகத்தை தான் பார்க்க விரும்புகிறேன் என ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.