Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சூரரைப்போற்று படத்தில் பணியாற்றியுள்ள பிரபல இயக்குனர்கள்!
சென்னை : இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெறித்தனமாக உருவான சூரரைப் போற்று திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் பல திரை பிரபலங்களின் பாராட்டு மழையிலும் நனைந்தது.
நெடுமாறன் மற்றும் சுந்தரி என்கிற பொம்மி கதாபாத்திரங்களுக்கு இணையாக ஊர்வசியின் கதாபாத்திரமும் அனைவராலும் கவரப்பட்ட நிலையில் இவருக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு பல பெருமைகளுக்கு சொந்தமான சூரரைப்போற்று திரைப்படத்தில் நம் பலருக்கும் அறிந்திராத வகையில் பிரபல இயக்குனர்கள் இதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
என்னை முழு நடிகையாக மாற்றியது மாரி கதாபாத்திரம் தான்... பூ நாயகியின் நெகிழ்ச்சி பதிவு !
வசூல் சாதனை
தமிழில் உருவான சில திரைப்படங்கள் இப்பொழுது ஒடிடியில் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், சூர்யா நடிப்பில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்று பெரும் வசூல் சாதனையை புரிந்து வருகிறது.
மற்றுமொரு பலமாக
சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பல பிரபலமான நடிகர்கள் இதில் நடித்திருக்க இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமாரின் வெறித்தனமாக இசை இப்படத்திற்கு மற்றுமொரு பலமாக அமைந்திருந்தது.
க.பெ.ரணசிங்கம்
இந்த நிலையில் பலரும் அறியாத வகையில் இந்த திரைப்படத்திற்கு முக்கிய பங்காக க.பெ.ரணசிங்கம் திரைப்படத்தின் இயக்குனர் விருமாண்டி, திமிருபிடிச்சவன் பட இயக்குனர் கணேஷா மற்றும் உரியடி புகழ் நடிகரும் இயக்குனருமான விஜயகுமார் உள்ளிட்டோர் இதில் முக்கிய பணியாற்றி உள்ளனர்.
திரைக்கதை எழுத்தாளராக
நம்பியார், திமிரு பிடித்தவன் படங்களை இயக்கிய இயக்குநர் கணேஷா சூரரைப்போற்று படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பங்கு வகித்துள்ளார்.
வசன உச்சரிப்புக்கு உதவியாக
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றியுடன் பாராட்டுக்களையும் பெற்ற க.பெ.ரணசிங்கம் படத்தை இயக்கியஇயக்குநர் விருமாண்டி சூரரைப் போற்று படத்தில் இடம் பெற்ற மதுரை வசன உச்சரிப்புக்கு உதவியாக இருந்துள்ளார்.
வசனம் எழுதியுள்ளார்
முழுக்க முழுக்க புதுமுகங்களின் முயற்சியில் உருவான உறியடி திரைப்படம் தமிழ் ரசிகர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த நிலையில் அதில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமான விஜயகுமார் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். மேலும் இவரது வசனங்கள் ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டுள்ளது.
முழுமை பெறுகிறது
இவ்வாறு வேறு வேறு சிந்தனைகள் கொண்ட இயக்குநர்கள் ஒரு கதைக்காக ஒன்றாக இணைந்து வேலை செய்யும் போது அப்படத்தின் டைமென்ஷன் இன்னும் வலு பெற்று முழுமை பெறுகிறது என்பதற்கு இந்த ஒரு திரைப்படமே எடுத்துக்காட்டு.
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!