Don't Miss!
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- News
86 நிமிட பட்ஜெட் உரை.. தொடர்ந்து மேஜையை தட்டி வரவேற்ற பிரதமர் மோடி.. எத்தனை முறை தெரியுமா? ஆஹா!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Lifestyle
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளுக்கு முதலில் 'குட்-பை' சொல்லுங்க...
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
19 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தாயான பிரபல நடிகையின் அம்மா
சென்னை : சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2, விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்து வருபவர் நேஹா மேனன். குழந்தை நட்சத்திரமாக நடிப்பை துவங்கிய நேஹா, பல சீரியல்களில் நடித்துள்ளார். நாரதன், ஜாக்சன் துரை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன், தனது குடும்பத்தில் நல்ல செய்தி ஒன்றை எதிர்பார்ப்பதாகவும், சரியான நேரத்தில் அதை வெளியிட போவதாகவும் நேஹா தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை வீடியோ ஒன்றை வெளியிட்ட நேஹா, தனது அம்மா கர்ப்பமாக இருந்ததாகவும், தற்போது 8 மாதத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்திருப்பதாகவும், மருத்துவமனையில் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
#PandiyanStores fame Neha's mother gives birth to a girl child . . 😍😍😍 pic.twitter.com/XlXTuiqguY
— Anbu (@Mysteri13472103) March 23, 2021
நேஹா, 2002 ம் ஆண்டு பிறந்தார். தற்போது 19 ஆண்டுகளுக்கு பிறகு அவரது அம்மா மீண்டும் தாயாகி உள்ளார். இது பற்றி நேஹா கூறுகையில், என் அம்மாவை விட நான் தான் தாயாக உணர்கிறேன். அவளை வளர்க்க ஆவலாக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் டிரோல் செய்யப்படுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த நேஹா, அது போன்ற அர்த்தமற்ற குப்பைகளுக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. ஒரு நல்ல மகிழ்ச்சியான தருணத்தை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.