Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
19 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தாயான பிரபல நடிகையின் அம்மா
சென்னை : சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2, விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்து வருபவர் நேஹா மேனன். குழந்தை நட்சத்திரமாக நடிப்பை துவங்கிய நேஹா, பல சீரியல்களில் நடித்துள்ளார். நாரதன், ஜாக்சன் துரை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன், தனது குடும்பத்தில் நல்ல செய்தி ஒன்றை எதிர்பார்ப்பதாகவும், சரியான நேரத்தில் அதை வெளியிட போவதாகவும் நேஹா தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் செவ்வாய்கிழமை வீடியோ ஒன்றை வெளியிட்ட நேஹா, தனது அம்மா கர்ப்பமாக இருந்ததாகவும், தற்போது 8 மாதத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்திருப்பதாகவும், மருத்துவமனையில் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
#PandiyanStores fame Neha's mother gives birth to a girl child . . 😍😍😍 pic.twitter.com/XlXTuiqguY
— Anbu (@Mysteri13472103) March 23, 2021
நேஹா, 2002 ம் ஆண்டு பிறந்தார். தற்போது 19 ஆண்டுகளுக்கு பிறகு அவரது அம்மா மீண்டும் தாயாகி உள்ளார். இது பற்றி நேஹா கூறுகையில், என் அம்மாவை விட நான் தான் தாயாக உணர்கிறேன். அவளை வளர்க்க ஆவலாக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் டிரோல் செய்யப்படுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த நேஹா, அது போன்ற அர்த்தமற்ற குப்பைகளுக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. ஒரு நல்ல மகிழ்ச்சியான தருணத்தை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.