Don't Miss!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சுஷாந்த் மேல என்ன ஒரு அன்பு.. ரசிகர் செய்த மெழுகு சிலை.. என்ன ஒரு சிரிப்பு.. குவிகிறது பாராட்டு!
மும்பை: மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த ரசிகர் ஒருவர் ஆளுயர மெழுகு சிலை ஒன்றை உருவாக்கி உள்ளார்.
கை போ சே, எம்.எஸ். தோனி பயோபிக், சிக்கோரே உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்து பாலிவுட் ரசிகர்களை கவர்ந்த இளம் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் திடீர் மரணம் ரசிகர்களை துயரக் கடலில் ஆழ்த்தியது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரம் பூதாகரம் எடுத்து பாலிவுட்டையே புரட்டிப் போட்டுள்ளது.
ரியாவிடம் விசாரணை
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என மும்பை போலீசார் தெரிவித்தனர். ஆனால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கிளம்பிய பிரச்சனை சிபிஐ விசாரணை, போதைப் பொருள் விசாரணை என நீண்டு கொண்டே போகிறது. சுஷாந்த் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அவரது காதலி ரியாவிடம் விசாரணை தொடர்கிறது.
ரசிகர்கள் கோரிக்கை
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ரசிகர்கள் அவரது உருவத்தை மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் சிலையாக வடித்து வைக்க வேண்டும் என்று ஏகப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்பி கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், மேடம் டுசாட்ஸ் இதுவரை அதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
மெழுகு சிலை
இந்நிலையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ரசிகர் சுகந்தோ ராய் என்பவர், தனது அருங்காட்சியகத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு அழகான ஆளுயர மெழுகு சிலையை செய்து வைத்து அசத்தி உள்ளார். அந்த சிலையின் புகைப்படங்களை சுஷாந்த் ரசிகர்கள் வேற லெவலில் வைரலாக்கி வருகின்றனர்.
சிரித்தபடி
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மீண்டும் உயிர்பெற்று கண் முன்னே நிற்பது போல அவ்வளவு தத்ரூபமாக அந்த சிலை வடிக்கப்பட்டு இருக்கிறது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அழகிய சிரித்த முகத்தை பார்க்கும் ரசிகர்கள் அந்த சிலையை செதுக்கிய சுகந்தோ ராயை பாராட்டி வருகின்றனர்.
Recommended Video
குடும்பம் கேட்டால்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தீவிர ரசிகன் நான். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தது என்னை மிகவும் வாட்டியது. அவர் நினைவாக எதையாவது செய்ய வேண்டும் என நினைத்த நான், இந்த மெழுகு சிலையை செய்துள்ளேன். சுஷாந்த்தின் குடும்பம் கோரிக்கை வைத்தால், அவர்களுக்கும் ஒரு மெழுகு சிலையை செய்து கொடுக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றுள்ளார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!