Don't Miss!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
சுஷாந்த் மேல என்ன ஒரு அன்பு.. ரசிகர் செய்த மெழுகு சிலை.. என்ன ஒரு சிரிப்பு.. குவிகிறது பாராட்டு!
மும்பை: மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த ரசிகர் ஒருவர் ஆளுயர மெழுகு சிலை ஒன்றை உருவாக்கி உள்ளார்.
கை போ சே, எம்.எஸ். தோனி பயோபிக், சிக்கோரே உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்து பாலிவுட் ரசிகர்களை கவர்ந்த இளம் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் திடீர் மரணம் ரசிகர்களை துயரக் கடலில் ஆழ்த்தியது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரம் பூதாகரம் எடுத்து பாலிவுட்டையே புரட்டிப் போட்டுள்ளது.
ரியாவிடம் விசாரணை
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என மும்பை போலீசார் தெரிவித்தனர். ஆனால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கிளம்பிய பிரச்சனை சிபிஐ விசாரணை, போதைப் பொருள் விசாரணை என நீண்டு கொண்டே போகிறது. சுஷாந்த் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அவரது காதலி ரியாவிடம் விசாரணை தொடர்கிறது.
ரசிகர்கள் கோரிக்கை
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ரசிகர்கள் அவரது உருவத்தை மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் சிலையாக வடித்து வைக்க வேண்டும் என்று ஏகப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்பி கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், மேடம் டுசாட்ஸ் இதுவரை அதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
மெழுகு சிலை
இந்நிலையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ரசிகர் சுகந்தோ ராய் என்பவர், தனது அருங்காட்சியகத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு அழகான ஆளுயர மெழுகு சிலையை செய்து வைத்து அசத்தி உள்ளார். அந்த சிலையின் புகைப்படங்களை சுஷாந்த் ரசிகர்கள் வேற லெவலில் வைரலாக்கி வருகின்றனர்.
சிரித்தபடி
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மீண்டும் உயிர்பெற்று கண் முன்னே நிற்பது போல அவ்வளவு தத்ரூபமாக அந்த சிலை வடிக்கப்பட்டு இருக்கிறது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அழகிய சிரித்த முகத்தை பார்க்கும் ரசிகர்கள் அந்த சிலையை செதுக்கிய சுகந்தோ ராயை பாராட்டி வருகின்றனர்.
Recommended Video
குடும்பம் கேட்டால்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தீவிர ரசிகன் நான். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தது என்னை மிகவும் வாட்டியது. அவர் நினைவாக எதையாவது செய்ய வேண்டும் என நினைத்த நான், இந்த மெழுகு சிலையை செய்துள்ளேன். சுஷாந்த்தின் குடும்பம் கோரிக்கை வைத்தால், அவர்களுக்கும் ஒரு மெழுகு சிலையை செய்து கொடுக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றுள்ளார்.