Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பிரபல நடிகையை கையை பிடித்து இழுத்து.. முத்தம் கொடுத்து.. அத்துமீறிய ரசிகர்.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: பிரபல நடிகையை ரசிகர் ஒருவர் கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஆஷிகா ரங்கனாத். மாடலிங் மூலம் தனது கேரியரை தொடங்கிய இவர், கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
2016ஆம் ஆண்டு வெளியான கிரேஸி பாய் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
வின்டேஜ் கதை.. பாலிவுட் வில்லன்.. அஜித் கதையை ரஜினிக்கு கொடுத்த சிவா.. அண்ணாத்த அப்டேட்!
மாஸ் ஹீரோக்கள்
தற்போது கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார் ஆஷிகா ரங்கனாத். 8 படங்களை கை வசம் வைத்திருக்கிறார். இவரது நடிப்பில் உருவாகி வரும் கருடா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. கன்னட சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து வருகிறார் ஆஷிகா ரங்கனாத்.
அத்துமீறிய ரசிகர்
இந்நிலையில் நடிகை ஆஷிகா ரங்கனாத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவர் யாரும் எதிர்பார்க்காத போது ராஷ்மிகாவின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடி விட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொட்டுப்பார்க்க ஆசை
தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் நடிகைகள் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் போது பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அனுமதி இல்லாமல் செல்பி எடுப்பது, ஆட்டோகிராப் பெறுவது என பாடாய் படுத்தி வருகின்றனர். நடிகைகள் என்றால் தொட்டுப் பார்க்கவும் ஆசைப்படுகின்றனர் ரசிகர்கள்.
தண்டனை வழங்க வேண்டும்
கண்ட இடங்களில் கையை வைத்து பாலியல் ரீதியாக அவர்களை துன்புறுத்துகிறார்கள். ஆஷிகா ரங்கனாத்திடம் அத்து மீறிய ரசிகரை கண்டு பிடித்து அவருக்கு தக்க தண்டனை பெற்று தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை உடனுக்கு உடன் கண்டித்தால் தான் நடிகர் நடிகைகளுக்கு பாதுகாப்பு இருக்கும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன.
ராஷ்மிகா அல்ல ஆஷிகா
முன்னதாக கன்னட சினிமாவின் மற்றும் ஒரு முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவின் பெயர்தான் இந்த விவகாரத்தில் அடிபட்டது. ராஷ்மிகா மந்தனாவைதான் ரசிகர் ஒருவர் கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்து ரகளை செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் ராஷ்மிகா அல்ல ஆஷிகா என்பது பின்னர் உறுதியானது.