Don't Miss!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
செய்வீங்களா?: பிரபல நடிகருக்கு புற்றுநோயுடன் போராடும் ரசிகர் உருக்கமான வேண்டுகோள்
ஜெய்பூர்: பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் விளம்பரம் செய்யும் குறிப்பிட்ட பிராண்டு புகையிலை பொருளை பயன்படுத்திய ரசிகர் தற்போது புற்றுநோயால் அவதிப்படுகிறார்.
பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கனின் தீவிர ரசிகர் நானக்ராம் மீனா(40). அஜய் குறிப்பிட்ட பிராண்டு புகையிலை விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தை டிவியில் அடிக்கடி பார்க்கலாம்.
அவர் விளம்பரப்படுத்திய புகையிலையை வாங்கி சாப்பிட்ட நானக்ராம் மீனாவுக்கு புற்றுநோய் இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னாள் காதலரின் திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்திய நடிகை
துண்டு அறிக்கை
நானக்ராம் மீனா தனக்கு புற்றுநோய் இருப்பதை அறிந்த பிறகு 1,000 துண்டறிக்கை அடித்து ஜெய்பூர் நகரில் பலருக்கு கொடுத்ததுடன், சுவர்களிலும் ஒட்டியுள்ளார். அந்த துண்டறிக்கையில் அஜய் தேவ்கன் மற்றும் அவரது குடும்பத்தார் எவ்வளவு புகையிலை சாப்பிடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
விளம்பரம்
புகையிலை, மது, சிகரெட் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பவை. அதனால் அதன் விளம்பரங்களில் பாலிவுட் பிரபலங்கள் நடிக்கக் கூடாது. அவர்கள் நடிப்பதை பார்த்து தான் ரசிகர்கள் பலர் அதை வாங்கி பயன்படுத்தி அவதிப்படுகிறார்கள் என்று அந்த துண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் விற்பனை
நானக்ராம் மீனா ஜெய்பூரில் உள்ள சங்கனேர் பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். புற்றுநோயால் அவர் பேசும் திறனை இழந்துவிட்டார். இதையடுத்து சாய்வாலா ஆன நானக்ராம் தற்போது வீட்டில் இருந்தபடியே பால் விற்பனை செய்கிறார்.
அனுஷ்கா சர்மா
முன்னதாக பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவையும் ரஜினிகந்தா விளம்பரத்தில் நடித்ததற்காக ரசிகர்கள் விளாசினார்கள். உங்களுக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக தீங்கு விளைவிக்கும் பொருளை விளம்பரம் செய்வதா என்று கேள்வி எழுப்பினர்.