Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
செய்வீங்களா?: பிரபல நடிகருக்கு புற்றுநோயுடன் போராடும் ரசிகர் உருக்கமான வேண்டுகோள்
ஜெய்பூர்: பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் விளம்பரம் செய்யும் குறிப்பிட்ட பிராண்டு புகையிலை பொருளை பயன்படுத்திய ரசிகர் தற்போது புற்றுநோயால் அவதிப்படுகிறார்.
பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கனின் தீவிர ரசிகர் நானக்ராம் மீனா(40). அஜய் குறிப்பிட்ட பிராண்டு புகையிலை விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தை டிவியில் அடிக்கடி பார்க்கலாம்.
அவர் விளம்பரப்படுத்திய புகையிலையை வாங்கி சாப்பிட்ட நானக்ராம் மீனாவுக்கு புற்றுநோய் இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னாள் காதலரின் திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்திய நடிகை
துண்டு அறிக்கை
நானக்ராம் மீனா தனக்கு புற்றுநோய் இருப்பதை அறிந்த பிறகு 1,000 துண்டறிக்கை அடித்து ஜெய்பூர் நகரில் பலருக்கு கொடுத்ததுடன், சுவர்களிலும் ஒட்டியுள்ளார். அந்த துண்டறிக்கையில் அஜய் தேவ்கன் மற்றும் அவரது குடும்பத்தார் எவ்வளவு புகையிலை சாப்பிடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
விளம்பரம்
புகையிலை, மது, சிகரெட் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பவை. அதனால் அதன் விளம்பரங்களில் பாலிவுட் பிரபலங்கள் நடிக்கக் கூடாது. அவர்கள் நடிப்பதை பார்த்து தான் ரசிகர்கள் பலர் அதை வாங்கி பயன்படுத்தி அவதிப்படுகிறார்கள் என்று அந்த துண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் விற்பனை
நானக்ராம் மீனா ஜெய்பூரில் உள்ள சங்கனேர் பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். புற்றுநோயால் அவர் பேசும் திறனை இழந்துவிட்டார். இதையடுத்து சாய்வாலா ஆன நானக்ராம் தற்போது வீட்டில் இருந்தபடியே பால் விற்பனை செய்கிறார்.
அனுஷ்கா சர்மா
முன்னதாக பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவையும் ரஜினிகந்தா விளம்பரத்தில் நடித்ததற்காக ரசிகர்கள் விளாசினார்கள். உங்களுக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக தீங்கு விளைவிக்கும் பொருளை விளம்பரம் செய்வதா என்று கேள்வி எழுப்பினர்.