Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஷாருக்கான் வீட்டிற்கு முன்பு கழுத்தை அறுத்துக் கொண்ட ரசிகர்: காரணம்...
மும்பை: ஷாருக்கானை நேரில் பார்க்க முடியாமல் போனதால் ரசிகர் ஒருவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த 2ம் தேதி தனது 53வது பிறந்தநாளை கொண்டாடினார். நள்ளிரவில் ஷாருக்கானின் பங்களாவான மன்னத்திற்கு முன்பு ஏராளமான ரசிகர்கள் கூடினார்கள்.
தன்னை பார்க்க வந்த ரசிகர்களை நோக்கி ஷாருக்கான் கையசைத்து பறக்கும் முத்தம் கொடுத்தார்.
கவலை
மும்பை தாராவி பகுதியை சேர்ந்த முகமது சலீம் அலாவுத்தீன் என்பவர் தனக்கு பிடித்த நடிகரான ஷாருக்கானை காண நேற்று அவரின் வீட்டிற்கு முன்பு அதிகாலை நேரம் முதலே நின்று கொண்டிருந்தார். சுமார் 3 மணிநேரம் அங்கு காத்திருந்தும் அவரை காண முடியவில்லை. இதனால் மனமுடைந்த அலாவுத்தீன் தான் வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.
மருத்துவமனை
ஷாருக்கான் வீட்டிற்கு முன்பு நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அலாவுத்தீனை மீட்டு அருகில் உள்ள பாபா மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் அந்த நபரை தூக்கிச் சென்றபோது ஷாருக் சார் என்று அவர் கத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. கழுத்தை அறுத்த பிறகும் அவர் அங்கிருந்து வர மறுத்ததால் போலீசார் தூக்கிச் சென்றனர்.
ஷாருக்கான்
அலாவுத்தீன் செய்த காரியத்தால் ஷாருக்கானின் பங்களா உள்ள பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து மன்னத் அருகே செல்ல ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிளப்
முன்னதாக ஷாருக்கானின் பிறந்தநாள் பார்ட்டி நைட் கிளப் ஒன்றில் நடைபெற்றது. ஊரே தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த கிளப்பில் பாட்டு சத்தம் ஓவராக இருந்ததால் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வந்து பார்ட்டியை நிறுத்தினார்கள். போலீசார் வந்ததும் ஷாருக்கான் மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.