வீரம் கெட்டப்பில் வந்த ரசிகர்: அஜீத் என்று நினைத்து முண்டியடித்த ரசிகர்கள்- தடியடி

அஜீத்தின் வீரம் படம் இன்று தமிழகம் முழுவதும் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னை அசோக் நகரில் உள்ள உதயம் தியேட்டரில் வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி இன்று காலை தியேட்டர் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் குவிந்ததால் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
அப்போது ரசிகர் ஒருவர் வீரம் படத்தில் அஜீத் வருவது போன்று நரைமுடி, கருப்புக் கண்ணாடி, வேட்டி, சட்டையுடன் காரில் வந்தார். அவரை பார்த்த ரசிகர்கள் அஜீத் தான் வந்துவிட்டார் என்று நினைத்து அவரை காண முண்டியடித்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன் பிறகு அஜீத் கெட்டப்பில் வந்த ரசிகர் காரில் இருந்து இறங்கி வந்து அங்கு கூடியிருந்தவர்களை பார்த்து கையசைத்தார். அவருடன் அஜீத் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


Click it and Unblock the Notifications











