Don't Miss!
- News தோளை தொட்ட சு.வெங்கடேசன்.. டக்னு திரும்பிய டாக்டர் சரவணன்.. பூரித்த மதுரை.. சபாஷ், இது போதுமே நமக்கு
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நடிகர் பெயருக்கு சொத்துகளை உயில் எழுதி வைத்துவிட்டு இறந்த ரசிகை!
மும்பை : சினிமா நடிகர்களுக்கு எல்லா காலகட்டங்களிலும் மிகத் தீவிரமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தத் தீவிரம் சமயங்களில் உச்சத்தைத் தொட்டு விடுகிறது.
நடிகர்களுக்கு சிலை வைப்பது, நடிகைகளுக்கு கோவில் கட்டுவது போன்றவையெல்லாம் ரசிகர்கள் அவர்கள் மீது கொண்டுள்ள மிகையான அபிமானத்தால் தான்.
தற்போது, மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மொத்த சொத்துகளையும், தனது விருப்பமான நடிகரான சஞ்சய் தத் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.
சஞ்சய் தத் ரசிகை
மலபார் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த நிஷி ஹரிச்சந்திரா திரிபாதி என்கிற பெண் நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகையாம். தனது தாயுடன் வசித்துவந்த இவர் கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு சமீபத்தில் காலமானார்.
சஞ்சய் தத் பெயருக்கு உயில்
அவரது வங்கி கணக்கு மற்றும் லாக்கரை ஆய்வு செய்த வங்கி அதிகாரிக்கு, அவர் தனது இருப்பில் உள்ள பணம், லாக்கரில் உள்ள தனது பொருட்கள் அனைத்தும் சஞ்சய் தத்துக்கே சொந்தம் என உயில் எழுதி வைத்திருந்தது தெரிய வர அதிர்ச்சியானாராம்.
ஏற்றுக்கொள்ள மறுத்த சஞ்சய் தத்
சஞ்சய் தத்தை அழைத்து இந்த விவரத்தை சொல்ல, அதையறிந்த சஞ்சய் தத் இப்படி ஒரு ரசிகையா என அதிர்ந்து போய் இருக்கிறார். ரசிகையின் அன்புகண்டு நெகிழ்ந்துபோன சஞ்சய் தத், அந்த ரசிகையின் பணம், பொருட்களை எல்லாம் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கே கொடுத்து விடும்படி ஏற்பாடுகளை செய்துவிட்டாராம்.
சிறை வாழ்க்கை
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்பு இருப்பதாக சஞ்சய் தத் கைது செய்யப்பட்டௌ 2016-ம் ஆண்டு தான் வெளிவந்தார். பல சர்ச்சைகள் கடந்தும் இவருக்கு இவ்வளவு தீவிரமான ரசிகை இருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.