twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துயரத்தில் தூத்துக்குடி மக்கள்: கார்த்தி, பிரசன்னா, யோகி பாபு செய்த நல்ல காரியம்

    By Siva
    |

    சென்னை: தூத்துக்குடி துக்க பூமியாகியுள்ள நிலையில் தனது படத்தை விளம்பரப்படுத்தப் போவது இல்லை என்று முடிவு செய்துள்ளார் நடிகர் பிரசன்னா.

    நாகராஜன் இயக்கத்தில் பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்த காலக்கூத்து படம் வெள்ளிக்கிழமை ரிலீஸாகியுள்ளது. தூத்துக்குடியில் 13 பேர் பலியாகியுள்ள நிலையில் தனது படத்தை விளம்பரப்படுத்தப் போவது இல்லை என்று தெரிவித்துள்ளார் பிரசன்னா.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து திரையுலக பிரபலங்கள் சிலர் தங்கள் பட வேலைகளில் மாற்றம் செய்து வருகிறார்கள்.
    அதில் பிரசன்னாவும் ஒருவர்.

    விளம்பரம்

    தன் படத்தை விளம்பரப்படுத்தப் போவது இல்லை என்ற முடிவை பிரசன்னா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    பிறந்தநாள்

    பிறந்தநாள்

    தூத்துக்குடியில் மக்கள் துக்கத்தில் இருக்கும்போது தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று கார்த்தி தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.

    யோகி பாபு

    ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகர் யோகி பாபு. படம் தொடர்பான ட்வீட்டுகளில் தன்னை டேக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    பாராட்டு

    பாராட்டு

    பிரசன்னா, கார்த்தி, யோகி பாபு ஆகியோரின் செயல்களை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீ காமெடியன் இல்லய்யா நீ தான்யா ஹீரோ என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Fans appreciate actors Prasanna, Karthi and Yogi Babu for their kind gesture at a time people of Tuticorin are in pain.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X