Don't Miss!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தேர்வு தான் முக்கியம் மாயநதி கௌசல்யா செந்திலின் முடிவு
சென்னை : அறிமுக இயக்குனர் அசோக் தியாகராஜன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் மாயநதி, இந்த படம் சரியாக ஜனவரி 31 வெளியாகி மக்களிடையே நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது .இந்த படம் முக்கியமாக எடுத்து கூறிய கருத்து மாணவர்களின் கல்வி பற்றி தான்.
தற்போது மாயநதி படத்தின் முக்கியமான படக்காட்சி ஒன்று ஸ்நீக் பீக்காக வெளியிடபட்டுள்ளது .இதில் அப்புக்குட்டி மற்றும் அபிசரவணன் மேலும் வெண்பா இடம்பெறும் காட்சிகள் வெளியிடபட்டிருக்கிறது .செந்திலாக அபிசரவணனும் கௌசல்யாவாக வெண்பாவும் நடித்து இருக்கின்றனர் .
காதல் வேண்டாம் நீ ஆட்டோ ஓட்டுனர், அவ படிச்சுட்டு இருக்கா என அறிவுரை கூறும் நண்பன் அப்புக்குட்டி,அதையும் மறுத்து காதல் தான் முக்கியம் என நினைக்கும் செந்தில் மேலும் அவ படிச்சு முடிச்சு வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்வாள் என அப்புக்குட்டி கூற செந்திலுக்கு காதல் கண்ணை மறைக்க தனது நண்பனை அடிக்கிறான்.
மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் அவர்களின் குழப்பம் பற்றியும் மாயநதி தெளிவாக எடுத்துரைத்து இருக்கிறது .இந்த படம் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றிருப்பது குறிப்பிடதக்கது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மகள் பவதாரணி அமைத்த இசையும் பலரை கவர்ந்திருக்கிறது.