Don't Miss!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- News ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாசம் நிறைந்த நதியில் மூழ்கி முத்து எடுத்துள்ளது இந்த மாயநதி
Recommended Video
சென்னை:அபி சரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி மற்றும் பலர் நடித்து இருக்கும் படம் மாயநதி. இப்படத்தை அசோக் தியாகராஜன் இயக்கி தயாரித்து உள்ளார். கடந்த 31 ஆம் தேதி வெளியான இப்படம் தற்போது வரை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மாயநதி படத்துடன் முன்று படங்கள் வெளியாகின அதில் மாயநதி நல்ல விமர்சனங்களையும் மற்றும் வசூலையும் குவித்து வருகிறது.
அப்பா மற்றும் மகள் பாசம் மற்றும் ஆட்டோ டிரைவர் மற்றும் பள்ளி மாணவி இடையே நடக்கும் காதல் இடையில் அப்பாவின் கனவை நனவாக்க வேண்டும் என்று நினைக்கும் மகள் போன்ற பலவற்றை உள்ளடக்கி அருவியில் இருந்து விழுந்த நதியாக மாயநதி வெளியானது.
வெண்பாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது. தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து உள்ளார். அபி சரவணன் தனது யதார்த்தமான நடிப்பை பதிவு செய்து உள்ளார். மற்றும் அப்பாவாக வரும் நரேன் தமிழ் சினிமாவில் உள்ள பல அப்பா வரிசையில் அவரும் ஒரு இடம் பிடித்துள்ளார். அப்புக்குட்டி தனது கதாபாத்திரத்தை சரியாக செய்து உள்ளார்.
ஒட்டு மொத்தத்தில் கதாபாத்திரத்திரங்கள் மற்றும் அதில் நடித்த நடிகர்கள் சரியாக தேர்வு செய்து நடிக்க வைத்ததாலே படத்தை அனைவரும் விரும்பினார்கள். படத்திற்கு மிகப் பெரிய பலம் ராஜ பவதாரணியின் இசை தான் என்றே சொல்ல வேண்டும். இளையராஜாவின் மகள் இசையில் இவர் ராணியாக வர பல வாய்ப்புகள் உள்ளது
பல படங்கள் வெளியானலும் அதனை எல்லாம் தாண்டி மாயநதி ரசிகர்களை மூழ்கடித்தது என்று தான் கூறவேண்டும். தமிழ் ரசிகர்கள் பாசப் போராட்டத்தையும் ரசிப்பார்கள் என்று இப்படம் உணர்த்தி உள்ளது. படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆனாலும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.