Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நீங்க ஏன் பிக்பாஸ தொகுத்து வழங்குறீங்க.. கமலிடம் காலர் கேட்ட கேள்வி.. ஏதோ இடிக்குதே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற காலர் கமலிடம் கேட்ட கேள்வியை பார்த்த ரசிகர்கள், இந்த வாரம் காலர் கமலுக்குதானோ என்று கேட்க தொடங்கிவிட்டனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் போட்டியார்களிடம் கடந்த சில வாரங்களாக பொது மக்களில் ஒருவர் காலராக கேள்வி கேட்டு வருகிறார்.
அந்த வகையில் ஷிவானி, ஆஜித் ஆகியோரிடம் இதுவரை கேள்வி கேட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் சோமிடம் பேச விரும்பினார் காலர் ஒருவர். சோமிடம் கேள்வி கேட்பதற்கு முன்பாக, கமலிடம் கேட்டார்.
கடைசியா மொத்தப் பேருக்கும் சுத்திப் போட்டு கிளம்பிய அர்ச்சனா.. விர்ட்சுவல் ஹக் கொடுத்த பிக்பாஸ்!
எதற்கு உங்களுக்கு பிக்பாஸ்?
அதாவது, சினிமாவில் நீங்கள் பார்க்கா புகழ் இல்லை பெறாத அவார்டு இல்லை பண்ணாத ரோல் இல்லை. இவ்ளோ சாதனைகள் செய்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது என்று கேட்டார்.
நானாக நான் பார்க்க
அதற்கு பதில் சொன்ன கமல், இங்கு அரசியல் பேசினால் மக்களை சென்றடையும் என்பதற்காக மட்டுமில்லை. என்னை பல மாதிரி பார்த்திருக்கிறீர்கள் என்பதை கேட்கும்போதே புல்லரிக்குது.என்னை நானாக நான் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி இது. 5 வயதில 50 என்னை பார்க்கிறீர்கள் பாராட்டுகிறீர்கள்.
அதில் இல்லாத மகிழ்ச்சி
அதில் எல்லாம் இல்லாத மகிழ்ச்சி. நீங்கள் நான் வேனில் வரும் போது நீங்கள் கொடுக்கும் வரவேற்பு கொடுக்கிறது. இந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கும் போது என் குடும்பத்துடன் இருந்து உங்களின் நானாக என்னை பார்ப்பதாக உள்ளது.
அரிய வாய்ப்பு
இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வயதுக்கு என்று இல்லாமல் பாட்டிமார்கள், சகோதரிகள், சின்னப்பிள்ளைகள் என பல தரப்பு ரசிகர்களும் உள்ளனர். சினிமா பார்க்காட்டியும் கூட சிறு பிள்ளைகள் என்னை தெருவில் பார்த்ததும் பிக்பாஸ் என்று கூறுகின்றனர்.. ஆகையால் இந்த நிகழ்ச்சி எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்றார்.
சோமிடம் கேள்வி
தொடர்ந்து சோமிடம் பேசிய காலர், உங்களின் தனித்துவம் தெரியவில்லை என்றார். அதற்கு பதில் சொன்ன சோம் நான் என்னுடைய 100% சதவீதம் என்னுடைய தனித்துவத்தை காட்டியிருக்கிறேன். நீங்கள் எங்கு பார்க்கவில்லை என்று தெரியவில்லை. நான் பேச வேண்டிய இடத்தில் பேசியிருக்கிறேன். நல்லா விளையாடுகிறேன் என்று கூறி முடித்துக் கொண்டார்.
எங்கேயே இடிக்கிறது
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த காலர் பகுதி சோம சேகருக்கானதா? அல்லது கமலுக்கானதா? என்று கேட்டு வருகின்றனரர். அரசியல் கட்சி தொடங்கி தீவிரமாக உள்ள கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில் இன்றைய காலர் பகுதி எங்கேயோ இடிப்பதாக கூறி வருகிறர்கள் ரசிகர்கள்.