twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடுத்தடுத்த ட்விஸ்ட்...ரசிகர்களை விசிலடிக்க வைத்த கேப்டன் டாஸ்க்

    |

    சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 64 வது நாளான இன்று, வழக்கமான வேக் அப் சாங் இல்லாமல் ஹவுஸ்மேட்கள் பேசிக் கொண்டிருப்பதை காட்டி நிகழ்ச்சி துவக்கப்பட்டது. அபிஷேக் வெளியேறியதால் பிரியங்கா தனிமையில் சோகமாக இருப்பதும் காட்டப்பட்டது.

    தொடர்ந்து இந்த வார கேப்டனை தேர்வு செய்வதற்கான டாஸ்க் வழங்கப்பட்டது. சுத்தி சுத்தி வந்தீங்க என்ற பெயரில் மியூசிக் சேர் டாஸ்க் நடத்தப்பட்டது. இதற்கு நடுவராக சிபி இருப்பார் என்றும், இந்த டாஸ்கில் வீட்டில் உள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

    சஞ்சீவை சிக்க வைத்த நிரூப் ...ப்ரோமோவில் கொளுத்தி போட்ட பிக்பாஸ் சஞ்சீவை சிக்க வைத்த நிரூப் ...ப்ரோமோவில் கொளுத்தி போட்ட பிக்பாஸ்

    கேப்டன்சி டாஸ்க்

    கேப்டன்சி டாஸ்க்

    பாடல் நிறுத்தப்பட்டதும் நாற்காலி இல்லாமல் இருக்கும் நபர் மற்றவர்களிடம் பேசி, தான் எதற்காக கேப்டன் ஆக வேண்டும், தனக்கு என்ன தகுதி உள்ளது என்பதை கூறி ஒருவரை அவருக்கு விட்டு தர வைக்க வேண்டும். அப்படி யாராவது விட்டுக் கொடுத்தால் அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார். நாற்காலியை பெற்றவர் போட்டியில் தொடருவார் என கூறப்பட்டது. ஆனால் டாஸ்க் துவங்குவதற்கு முன்பே இமான் அண்ணாச்சி, யார் ஜெயிச்சாலும் பாவ்னி அதை தட்டி பறித்துக் கொள்வார் என்றார் ஜாலியாக.

    பிரியங்காவை மறுக்கும் தாமரை

    பிரியங்காவை மறுக்கும் தாமரை

    தொடர்ந்து கார்டன் ஏரியாவில் கேப்டன் டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் முதல் ஆளாக தாமரை வெளியேறினார். அவர் அமீர், அண்ணாச்சி உள்ளிட்டோரிடம் விட்டு தரும்படி கேட்டார். ஆனால் பிரியங்கா தானாக முன் வந்து நாற்காலியை விட்டு தருவதாக கூறியும் அதை தாமரை ஏற்கவில்லை.

    அக்ஷராவிற்காக விட்டு தந்த சிபி

    அக்ஷராவிற்காக விட்டு தந்த சிபி

    இதே போல் யாரும் எதிர்பாராத புதிய ட்விஸ்டாக அக்ஷராவிற்காக சிபி விட்டுக் கொடுத்தார். சஞ்சீவிற்காக ராஜு விட்டுக் கொடுத்தார். சஞ்சீவ் நடுநிலைமையாக அனைத்தையும் சொல்வதால் கேப்டனாக இதை விட தகுதி இருக்க முடியாது என விளக்கமும் கூறி அனைவரையும் ஏற்க வைத்தார் ராஜு. இதே போல் மற்றொரு ட்விஸ்டாக பிரியங்காவிற்காக நிரூப் விட்டுக் கொடுத்தார். பிரியங்கா வேண்டாம் என்று கூறியும் நிரூப் அவருக்காக விட்டுக் கொடுத்தார். இது நட்புக்கு கொடுக்கும் மரியாதை என சஞ்சீவ், பிரியங்காவிடமே கூறினார். பிரியங்காவும், நிரூப் செய்ய மாட்டான் என நினைத்தேன். ஆனால் விட்டுக் கொடுத்து விட்டான் என்றார்.

    சஞ்சீவ் செய்த வேலை

    சஞ்சீவ் செய்த வேலை

    ராஜு, சஞ்சீவிற்காக விட்டுக் கொடுத்த நிலையில், அந்த வாய்ப்பை சஞ்சீவ், அமீருக்காக விட்டுக் கொடுத்தார். பிறகு தனியாக கேமிரா முன் வந்து பேசிய சஞ்சீவ், அமீரும் பாவ்னியும் ரொம்ப க்ளோஸ். அதனால் அவர்கள் மோதிக் கொண்டால் என்ன நடக்கிறது என்பதை பார்க்கத்தான் விட்டுக் கொடுத்தேன் என்றார்.

    பதவியே வேண்டாம்

    பதவியே வேண்டாம்

    அக்ஷராவின் ஒரு நாள் கேப்டன்சியை பார்த்து விட்டு அன்று தான் பெஸ்டான நாள் என சஞ்சீவே கூறியதால் அவரது கேப்டன்சியை பார்க்க வேண்டும் என்பதற்காக விட்டுக் கொடுக்கிறேன் என வருணும் அக்ஷராவிற்காக விட்டுக் கொடுத்தார். ஆனால் இமான் அண்ணாச்சி, தான் யாரிடமும் கேட்க விரும்பவில்லை. எப்படியும் அந்த கேப்டன் பதவியை பாவ்னி பறித்து விடுவார். அதனால் எனக்கு வேண்டாம் என சென்று விட்டார்.

    நிரூப் கொடுத்த ஐடியா

    நிரூப் கொடுத்த ஐடியா

    அபினய் வெளியேறிய போது பாவ்னி விட்டு கொடுப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வாறு செய்யவில்லை. ஆனால் அபினய்யை தனியே அழைத்துச் செல்லும் நிரூப், பாவ்னி வைத்திருக்கும் காயினை எடுத்து நீ நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள். காயின் எங்கு உள்ளது என நான் சொல்கிறேன் என ஐடியா கொடுக்கிறார்.

    அமீர் கேட்ட நச் கேள்வி

    அமீர் கேட்ட நச் கேள்வி

    அனைவரும் வெளியேறிய நிலையில் அமீர், அக்ஷரா, பாவ்னி ஆகியோர் மட்டும் உள்ளனர். இதில் நாற்காலியை இழந்த பாவ்னி, அமீரிடம் விட்டு தரும்படி கேட்கிறார். அதற்கு அமீர், நான் விட்டுத் தருகிறேன். ஆனால் நீ வெற்றி பெறாவிட்டால் உன்னிடம் உள்ள காயினை பயன்படுத்தி, அக்ஷராவின் கேப்டன் பதவியை பறிக்கக் கூடாது என்கிறார். இது செம ட்விஸ்டா இருக்கே என மற்ற ஹவுஸ்மேட்கள் கைதட்டி ரசித்தனர். ஆனால் அதை ஏற்காத பாவ்னி, அக்ஷராவிடம் விட்டு தரும் படி கேட்கிறார். அக்ஷராவோ தான் கேப்டன் ஆனதே இல்லை. அதனால் விட்டு தர முடியாது என்கிறார்.

    பதவியை தட்டி பறித்த பாவ்னி

    பதவியை தட்டி பறித்த பாவ்னி

    இறுதியாக அமீர் மற்றும் அக்ஷரா இடையே போட்டி நடக்க, அதில் அமீர் வெற்றி பெறுகிறார். அப்போது முதல் ஆளாக வந்து அமீருக்கு வாழ்த்து சொல்கிறார் பாவ்னி. ஆனால் சிறிது நேரத்திலேயே கேப்டன் பதவியை மாற்றி அமைக்கும் சலுகையை பயன்படுத்துகிறீர்களா என பிக்பாஸ் கேட்டதற்கு, கொஞ்சமும் யோசிக்காமல் தான் காயினை பயன்படுத்துவதாக கூறினார் பாவ்னி.

    English summary
    Fans enjoyed this week captainsy task. this task is full of fun and more twists. finaly amir won task. but pawni used her coin power and captured captain post from amir.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X