Don't Miss!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிடித்த போட்டியாளர்.. பரிசுகளால் திணற வைத்த ரசிகைகள்.. திக்குமுக்காடிப் போன பிக்பாஸ் பிரபலம் !
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரனை பிடித்த போட்டியாளர் என கூறி 100 ரசிக ரசிகைகள் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளனர்.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 106 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது.
இயக்குநர் சேரன், நடிகைகள் வனிதா, மதுமிதா, அபிராமி, சாக்ஷி அகர்வால், ரேஷ்மா, நடிகர் சரவணன், ஃபாத்திமா பாபு, கவின் சாண்டி, முகென், தர்ஷன், மோகன் வைத்யா என 15 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது.
டைட்டில் வின்னர்
மாடலான மீரா மிதுன் 2 நாட்கள் தாமதமாகவும் நடிகை கஸ்தூரி வைல்டு கார்டு என்ட்ரியாகவும் பங்கேற்றனர். இதில் முகென் பிக்பாஸ் டைட்டில் வின்னரானார். அவருக்கு பிக்பாஸ் ட்ரோபியும் 50 லட்சம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டது.
புதுபுது உறவுகள்
வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே இந்த பிக்பாஸும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. அதே நேரத்தில் அப்பா மகள், அண்ணன் தம்பி, அண்ணன் தங்கை என புதுபுது உறவுகளும் மலர்ந்தன.
சேரப்பா..
குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் கண்ணியத்துடனும் முதிர்ச்சியுடனும் நடந்துகொண்டவர் இயக்குநர் சேரன் தான். லாஸ்லியா தனது அப்பாவை போன்று இருப்பதாக கூறி சேரனை சேரப்பா என அழைக்க தொடங்கினார்.
பிடித்த போட்டியாளர்
இதனால் தமிழ் மக்கள் மத்தியில் இன்று சேரப்பாவாகவே மாறிவிட்டார் சேரன். அவருடைய நேர்மையான அணுகுமுறையால் பார்வையாளர்களின் ஃபேவரைட் கன்டெஸ்ட்டன்ட் ஆனார் சேரன்.
பரிசு பாராட்டு
இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழகம், பெங்களூரு மற்றும் சிங்கப்பூரில் இருந்து 100 பேர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தங்களுக்கு பிடித்த போட்டியாளர் என இயக்குநர் சேரனை பாராட்டியுள்ளார்கள். மேலும் பரிசுப்பொருட்களையும் அள்ளிக்கொடுத்து திக்குமுக்காட செய்துள்ளனர்.
|
டிவிட்டரில் நெகிழ்ச்சி
இதனால் உருகிப்போன இயக்குநர் சேரன் அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமுடன் தெரிவித்துள்ளார். அந்த போட்டோக்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.