Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து செய்தி... ரஜினியை நினைத்து கவலைப்படும் ரசிகர்கள்
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி தங்களது 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளும் முடிவை வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து திரையுலகம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் ரஜினிக்கு இந்த விவகாரத்தில் அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
கொரோனாவில் இருந்து குணமான கீர்த்தி சுரேஷ்.. என்ன முகம் இப்படி டல் ஆகிடுச்சே என வருந்தும் ஃபேன்ஸ்!
தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து முடிவு
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளும் அதிர்ச்சிகரமான முடிவை எடுத்துள்ளனர். இருவருக்குள்ளும் சமீப ஆண்டுகளாக புகைச்சல் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவர்களின் இந்த முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
கூட்டாக அறிவிப்பு
இருவரும் சிறப்பான நண்பர்களாக தோள் கொடுத்து வாழ்ந்ததாகவும் தற்போது இந்த முடிவு தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதிலிருந்து மீள தங்களுக்கு அவகாசம் தர வேண்டும் என்றும் இருவரும் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் வருத்தம்
இந்நிலையில் இந்த முடிவால் மிகுந்த மனஉளைச்சலுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது இரண்டாவது மகள் சவுந்தர்யாவிற்கு விவாகரத்து நடந்து அவருக்கு மீண்டும் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் வருத்தம்
சவுந்தர்யாவின் விவாகரத்து முடிவால் ரஜினிகாந்த் மிகுந்த வருத்தத்தில் காணப்பட்டார். தொடர்ந்து அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் அதிலிருந்து மீண்ட சம்பவங்களும் நடந்தேறியது. இந்நிலையில் மூத்த மகளும் விவாகரத்து முடிவை தற்போது எடுத்துள்ளார்.
பேரன்கள் மீது பாசம்
தனுஷ் -ஐஸ்வர்யாவின் மகன்கள் மீது ரஜினிகாந்த் மிகுந்த பாசத்துடன் காணப்படுகிறார். சமீபத்தில் அண்ணாத்த படத்தை தன்னுடைய பேரன்களுடன் சென்று கண்டுகளித்த சம்பவமும் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது அவர்களின் எதிர்காலம் குறித்து கவலைகொள்ளாமல் தனுஷ் -ஐஸ்வர்யா இந்த விவாகரத்து முடிவை எடுத்துள்ளனர்.
ரஜினி யோசனை
தன்னுடைய பேரன்கள் மீது மிகுந்த பாசம் கொண்ட ரஜினிக்கு, தற்போது அவர்கள் குறித்த கவலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆயினும் தனுஷ் -ஐஸ்வர்யாவின் முடிவை மாற்ற முடியாது என்பதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ரஜினி யோசிப்பார் என்று தெரிகிறது.
Recommended Video
ரசிகர்கள் வருத்தம்
தன்னுடைய சினிமா கேரியரில் சிறப்பான பல முடிவுகளை மிகவும் வலிமையுடன் எடுக்கும் ரஜினியின் சொந்த வாழ்க்கையில் அடுத்தடுத்து இத்தகைய சோதனைகள் வருவது குறித்து அவரது ரசிகர்கள் தற்போது சமூகவலைதளங்கள் மூலம் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
மனவலிமைக்கு பிரார்த்தனை
இத்தகைய மனவேதனையுடன்தான் கடந்த பொங்கலன்று ரசிகர்களை சந்தித்தாரா ரஜினிகாந்த் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதையும் கேள்விக்குட்படுத்தியுள்ளார்கள் ரஜினி ரசிகர்கள். இந்த நேரத்தில் அவருக்கு மனவலிமை கிடைக்கட்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகள்
மேலும் தன்னுடைய கேரியரில் பெரிய அளவில் சாதித்தாலும் அவரது சொந்த வாழ்க்கையில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கடவுள் அவரை அளவுக்கதிகமாக சோதிப்பதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இத்தகைய ட்வீட்கள் ட்ரெண்டாகி வருகிறது.
ரஜினி குறித்து வருத்தம்
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வது குறித்த வருத்தம் ரஜினி ரசிகர்களுக்கு இருப்பதை காட்டிலும் இந்த நேரத்தில் தங்களது விருப்பத்திற்குரிய நடிகரின் மனவருத்தமே அவர்களுக்கு பெரிதாக தெரிவது அவர்கள் அவர் மீது வைத்துள்ள அளவுக்கு அதிகமான அன்பையே வெளிக்காட்டுகிறது.