Don't Miss!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
'வேலைக்காரன்' படத்தின்போது மொபைலில் ஃப்ளாஷ் அடித்த ரசிகர்கள்... தியேட்டர்களில் பரபரப்பு!
சென்னை : மோகன் ராஜா இயக்கத்தில் சிவகர்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடித்த 'வேலைக்காரன்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
'வேலைக்காரன்' படத்தில் மக்களுக்கு நல்ல சமூகக் கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா. சிவகார்த்திகேயன் பேசும் சில வசனங்களுக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது.
படத்தின் சில காட்சிகள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன. அவற்றில் ஒரு காட்சியில் ரசிகர்கள் தங்களது மொபைலில் ஃப்ளாஷ் லைட் ஆன் செய்து ஆதரவு தெரிவித்தனர்.
வேலைக்காரன்
'வேலைக்காரன்' படம் உணவு அரசியலையும், கார்ப்பரேட் சதிகளையும் ஓரளவு நேர்மையாக எடுத்துக்காட்டியிருக்கிறது. சாமானிய மக்களும், நிறுவன ஊழியர்களும் பாதிக்கப்படுவது பற்றி வசனங்கள் இடம்பெறும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்கிறார்கள்.
இரவு 12 மணி
படத்தின் ஒரு காட்சியில், சிவகார்த்திகேயன், தனக்கு ஆதரவு தருவதாக இருந்தால் இரவு 12 மணிக்கு அவரவர் வீடுகளில் விளக்கை ஆன் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைப்பார். அதன்படி இரவு 12 மணியை நெரும்ங்கும்போது எல்லோரும் ஆவலாகக் காத்திருப்பார்கள்.
ஃப்ளாஷ் லைட் ஆன்
அந்தக் காட்சி திரையரங்கில் ஓடும்போது ரசிகர்களில் பாதிப் பேர் தங்களது மொபைல் போன்களில் ஃப்ளாஷ் லைட்டை ஆன் செய்து வெளிச்சம் காட்டி ஆரவாரம் செய்தனர். சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலர் விசில் அடித்தும், ஆரவாரம் செய்தும் கொண்டாடினர். இது திரையரங்கில் சிறிது நேரம் பரபரப்பை உண்டாக்கியது.
வேலைக்காரன் கேட்பான்
"ஆபிஸர் கேட்கமாட்டான்... அத்தாரிட்டியும் கேட்காது... ஆனா நான் கேட்பேன்.. ஐ மீன் வேலைக்காரன் கேட்பான்" என சிவகார்த்திகேயன் சொல்லும் காட்சியில் தியேட்டரே விசில் சத்தத்தால் அதிர்ந்தது. முதல் காட்சியில் சிவா ரசிகர்கள் அதிகம் இருந்ததால் வசனங்களுக்கு ஆரவாரம் செய்தனர்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!