Don't Miss!
- News வல்லவர்களை..நல்லவர்களை..! இன்றைக்கு ரொம்ப முக்கியம்.. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கிய கோரிக்கை..!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'வேலைக்காரன்' படத்தின்போது மொபைலில் ஃப்ளாஷ் அடித்த ரசிகர்கள்... தியேட்டர்களில் பரபரப்பு!
சென்னை : மோகன் ராஜா இயக்கத்தில் சிவகர்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடித்த 'வேலைக்காரன்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
'வேலைக்காரன்' படத்தில் மக்களுக்கு நல்ல சமூகக் கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா. சிவகார்த்திகேயன் பேசும் சில வசனங்களுக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது.
படத்தின் சில காட்சிகள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன. அவற்றில் ஒரு காட்சியில் ரசிகர்கள் தங்களது மொபைலில் ஃப்ளாஷ் லைட் ஆன் செய்து ஆதரவு தெரிவித்தனர்.
வேலைக்காரன்
'வேலைக்காரன்' படம் உணவு அரசியலையும், கார்ப்பரேட் சதிகளையும் ஓரளவு நேர்மையாக எடுத்துக்காட்டியிருக்கிறது. சாமானிய மக்களும், நிறுவன ஊழியர்களும் பாதிக்கப்படுவது பற்றி வசனங்கள் இடம்பெறும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்கிறார்கள்.
இரவு 12 மணி
படத்தின் ஒரு காட்சியில், சிவகார்த்திகேயன், தனக்கு ஆதரவு தருவதாக இருந்தால் இரவு 12 மணிக்கு அவரவர் வீடுகளில் விளக்கை ஆன் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைப்பார். அதன்படி இரவு 12 மணியை நெரும்ங்கும்போது எல்லோரும் ஆவலாகக் காத்திருப்பார்கள்.
ஃப்ளாஷ் லைட் ஆன்
அந்தக் காட்சி திரையரங்கில் ஓடும்போது ரசிகர்களில் பாதிப் பேர் தங்களது மொபைல் போன்களில் ஃப்ளாஷ் லைட்டை ஆன் செய்து வெளிச்சம் காட்டி ஆரவாரம் செய்தனர். சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலர் விசில் அடித்தும், ஆரவாரம் செய்தும் கொண்டாடினர். இது திரையரங்கில் சிறிது நேரம் பரபரப்பை உண்டாக்கியது.
வேலைக்காரன் கேட்பான்
"ஆபிஸர் கேட்கமாட்டான்... அத்தாரிட்டியும் கேட்காது... ஆனா நான் கேட்பேன்.. ஐ மீன் வேலைக்காரன் கேட்பான்" என சிவகார்த்திகேயன் சொல்லும் காட்சியில் தியேட்டரே விசில் சத்தத்தால் அதிர்ந்தது. முதல் காட்சியில் சிவா ரசிகர்கள் அதிகம் இருந்ததால் வசனங்களுக்கு ஆரவாரம் செய்தனர்.