Don't Miss!
- News பேலஸ்ட்லெஸ் டிராக்.. புல்லெட் ரயிலுக்கான வழித்தடம் இப்படித்தான் இருக்க போகுது.. வெளியான புகைப்படம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
தேர்வை முடித்ததும் ஸ்ரீதேவிக்காக நேராக பிணவறைக்கு சென்ற பள்ளி மாணவி
Recommended Video
துபாய்: துபாயில் உள்ள தடயவியல் துறை கட்டிடம் முன்பு ஸ்ரீதேவியின் ரசிகர்கள் கவலையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உறவினரின் திருமணத்திற்காக துபாய் சென்ற இடத்தில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார். பிரேத பரிசோதனை முடிந்துள்ள நிலையில் அவரின் உடல் இன்று இரவு இந்தியா கொண்டு வரப்படுகிறது.
பிரேத பரிசோதனை முடிந்தும் அவரின் உடலை தடயவியல் துறை இன்னும் ஒப்படைக்கவில்லை.
கவலை
ஸ்ரீதேவியின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்த்துவிடும் ஆசையில் அவரின் ரசிகர்கள் தடயவியல் துறை கட்டிடம் முன்பு காலையில் இருந்து காத்துக் கிடக்கிறார்கள்.
பெரியவர்
12 வயது பள்ளி மாணவி அக்ஷரா ரஜத் முதல் 45 வயது சிவில் என்ஜினியர் வரை தடயவியல் துறை கட்டிடம் முன்பு காத்துக் கிடக்கிறார்கள். மாணவிக்கு இன்று பள்ளியில் தேர்வு இருந்தது.
ஸ்ரீதேவி
தேர்வை முடித்த கையோடு நேராக தடயவியல் துறை கட்டிடம் இருக்கும் இடத்திற்கே தனது தந்தையுடன் வந்துவிட்டார் மாணவி அக்ஷரா. தனக்கு பிடித்த நடிகை இறந்த கவலை அக்ஷராவின் முகத்தில் உள்ளது.
சென்னை
துபாயில் வேலை பார்க்கும் ராஜகோபாலனும் ஸ்ரீதேவியின் முகத்தை காண காத்துக் கொண்டிருக்கிறார். எங்கள் தமிழகத்தை சேர்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் எங்களின் பெருமை என்று தெரிவித்துள்ளார் ராஜகோபாலன்.
அதிர்ச்சி
துபாயில் பணியாற்றும் சென்னையை சேர்ந்த என்ஜினியர் உஸ்மான் காலை 10 மணியில் இருந்தே காத்துக் கொண்டிருக்கிறார். ஸ்ரீதேவி இறந்துவிட்டதாக என் சகோதரி போன் செய்து கூறினார். என்னால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்றார் உஸ்மான்.