Don't Miss!
- News பள்ளிக்கரணை ஆணவக் கொலையால் இறந்த கணவன்.. துக்கம் தாளாமல் விஷம் குடித்து தற்கொலை செய்த மனைவி
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அடுத்த வருஷம் டும் டும் டும்... திருமணத்தை அறிவித்த பிரபல காதல் ஜோடி!
மும்பை: பாலிவுட்டில் அதிகம் கவரப்படும் காதல் ஜோடியான ஃபர்கான் அக்தர், ஷிபானி தண்டேகர் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஃபர்கான் அக்தர். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு அதுனா பாபனி என்பவரை மூன்றாண்டு காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஷக்யா மற்றும் அகிரா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர்.
ஃப்ரோஸன் 2 படத்தில் மகேஷ் பாபுவுக்கு இப்படியொரு சம்மந்தம் இருக்கா?
பீச்சில் கட்டிப்பிடித்து..
இதனை தொடர்ந்து ஐபிஎல் தொகுப்பாளினியும் பாலிவுட் நடிகையுமான ஷிபானி தண்டேகரும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இருவரும் பீச்சில் அரைகுறை ஆடையில் கட்டிப்பிடித்து விளையாடும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகும்.
லிவிங் டுகெதர்
இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர் சுற்றி வந்தனர். அந்த போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக லிவிங் டுகெதர் முறையிலும் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.
தீபிகா ரிசெப்ஷன்
ஒரு கட்டத்தில் இருவரும் தங்களின் காதலை உறுதி செய்தனர். மேலும் பார்ட்டி, சினிமா நிகழ்ச்சிகள் என அனைத்திலும் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற தீபிகா படுகோன், ரன்வீர் சிங் திருமண ரிசெப்ஷனிலும் இந்த ஜோடி கலக்கலாக பங்கேற்றது.
தீபாவளி கொண்டாட்டம்
ஷிபானி ஃபர்கான் மகள்களுடனும் குடும்பத்துடனும் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் தீபாவளி பண்டிகையை கூட ஷிபானி, ஃபர்கான் அக்தர் வீட்டில் கொண்டாடியிருக்கிறார். இதுதொடர்பான போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டன.
இன் ஏப்ரல் வி மே
இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றில் இருவரும் நேர்காணல் அளித்தனர். அதில் ஷிபானி, தனது காதலரான ஃபர்கான் அக்தரிடம் நாம் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் ஏப்ரலா அல்லது மேவா? என கேட்டார். அதற்கு ஃபர்கான் அக்தர் சிரித்துக் கொண்டே "இன் ஏப்ரல் வி மே" என நகைச்சுவையாக பதிலளித்தார்.
பாலிவுட்டில் பரபரப்பு
இதனால் காதல் ஜோடி வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் திருமணம் செய்து கொள்வார்கள் தெரிகிறது. இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் காதல் வானில் சிறகடித்து பறந்து வந்த காதல் ஜோடி அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்திருப்பது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.