பெப்சி உடைந்துவிட்டது - சொல்கிறார் தேனப்பன்
போலீஸ் துணையுடன் படப்பிடிப்பு நடத்தி சந்தோஷத்தில், பெப்சி அமைப்பு உடைந்துவிட்டது என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் சங்க நிர்வாகி பி எல் தேனப்பன்.
இதுகுறித்து இன்று அவர் அளித்துள்ள பேட்டியில், "சினிமா படப்பிடிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகின்றன.
பெப்சி தொழிலாளர்களுக்கு அவர்கள் கேட்ட ஊதியத்தை கொடுத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
ஆனால் நிர்வாக பொறுப்பில் இருக்கும் சிலர் தங்கள் சுய நலத்துக்காகவும் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் போக்கு பிடிக்காமல் பெப்சியில் இடம் பெற்றிருந்த பல சங்கங்கள் விலகி எங்களுக்கு ஆதரவாக வந்துள்ளன. பெப்சி உடைந்துவிட்டது.
தயாரிப்பாளர்கள் ஏற்கனவே வீட்டை அடமானம் வைத்து படங்கள் எடுத்து கஷ்ட நிலையில் இருக்கின்றனர். பெப்சி தொழிலாளர் போராட்டம் தேவையற்றது," என்ரார்.
ஆனால் பெப்சி தொழிலாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாகவும், விரைவில் தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப் போவதாகவும் பெப்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











