Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
படப்பிடிப்புகள் இன்று ரத்து.. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்
சென்னை: பெப்சி தலைவர் ஜி.சிவா மீது ஒளிப்பவதிவாளர் சங்கத்தினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, படப்பிடிப்புகள் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (SICA) தேர்தல், 10 மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் புதிய தலைவராக பொறுப்பேற்றார். சங்கத் தலைவர் பிசி ஸ்ரீராம் மற்றும் நிர்வாகிகள், பெப்சி சிவா உள்ளிட்ட சங்கத்தின் முன்னாள் நிர்வாகத்தினர் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் ஊழல் முறைகேடு புகார் அளித்தனர். அந்தப் புகார் மனுவில், '2008 முதல் 2014 வரைக்குமான கணக்குகளை சரியாக ஒப்படைக்கவில்லை' என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெப்சி தலைவர் ஜி.சிவா மீது ஒளிப்பவதிவாளர் சங்கத்தினர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. டப்பிங், பாடல் பதிவுகள், படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.