Don't Miss!
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- News எத்தனை பேர் வந்தாலும்.. கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் "மட்டும்" ஏன் ஸ்பெஷல்?
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
மத்திய அமைச்சரிடம் 8 கோரிக்கைகளை முன்வைத்த பெப்சி... நிறைவேறுமா?
சென்னை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் 8 கோரிக்கைகளை பெப்சி(தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு) தலைவர் ஜி.சிவா முன் வைத்திருக்கிறார்.
பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு நேற்று வருகை புரிந்தார். அவரை நடிகர் சங்கத் தலைவர் நாசர், பெப்சி தலைவர் சிவா மற்றும் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
1. மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும்.
2.இலவச மருத்துவ உதவி, மருத்துவ காப்பீடு, இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கிட வேண்டும்.
3. வாரிசுகளுக்கு கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் இடம் வழங்க வேண்டும்.
4. வாரிசுகளுக்கு வங்கிக்கடன் வழங்க வேண்டும்.
5.பாரத பிரதமரின் சுரக்ஷா, பீம யோஜனா திட்டங்களின் கீழ் வாழ்நாள் காப்பீடு வழங்க வேண்டும்.
6.ஓய்வுதியம் வழங்க வேண்டும்.
7. மத்திய அரசுக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த குறைந்த கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.
8.அரசின் சாதனை மற்றும் விளம்பர படங்களில் பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டும்.
மேற்சொன்ன கோரிக்கைகளை திரைப்படத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு நிறைவேற்றித் தரவேண்டும் என்று பெப்சி அமைப்பு கோரிக்கை வைத்திருக்கிறது.
இந்த கோரிக்கைகளை படித்துப் பார்த்த அமைச்சர், அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் செய்து கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.