Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முடிவுக்கு வருகிறது ஃபெப்சி ஸ்ட்ரைக்... முத்தரப்பு கூட்டத்தில் சுமூகத் தீர்வு!
சென்னை: ஃபெப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இன்று சென்னையில் நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் சுமூகமான போக்கு நிலவியதால், நாளை வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஃபெப்சி முடிவு செய்துள்ளது.
சினிமா தயாரிப்பாளர் சங்கத்துக்கும், திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பான 'பெப்சி'க்கும் சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் ஸ்ட்ரைக் அறிவித்தனர். இதனால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. ரஜினியைச் சந்தித்துப் பேசிய பிறகு ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்றது ஃபெப்சி.
இந்த நிலையில் திரைப்பட தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் பயிற்சி பெற்று திரைப்பட தொழிலில் பங்கேற்கலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சமீபத்தில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'பெப்சி' தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சினிமா தொழிலாளர்களின் இந்த வேலைநிறுத்தம் காரணமாக ரஜினியின் 'காலா' உள்பட 30 புதிய படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. ஏகப்பட்ட இழப்பு தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இரு தரப்பிலும்.
இதையடுத்து திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையே சமரச முயற்சி நடந்தது.
இதன்படி நேற்று இரவு பட தயாரிப்பாளர்கள், பெப்சி அமைப்பு, இயக்குனர்கள் சங்கம் ஆகியவை சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, 'பெப்சி' தலைவர் செல்வமணி, இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நள்ளிரவு 12 மணி வரை நடந்த இந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஒருசில சிறிய பிரச்சினைகள் உள்ளன. அதை பேசி தீர்ப்போம் என்று விஷால் கூறினார்.
'நல்ல தீர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக' செல்வமணி அறிவித்தார்.
பெப்சியில் மொத்தம் 23 சங்கங்கள் உள்ளன. இதில் நீக்கப்பட்ட டெக்னீஷியன் சங்கம் தவிர மற்ற சங்கங்களுடன் பேசி 3 நாட்களில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று ஃபெப்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?