Just In
- 12 min ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 57 min ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 1 hr ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 1 hr ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
Don't Miss!
- News
வாரே வா.. பாஜகவுக்கு செக்.. "இங்கு"தான் நான் போட்டியிட போகிறேன்.. தொகுதியை அறிவித்தார் மம்தா பானர்ஜி
- Sports
ரோகித், கில் சிறப்பான துவக்கத்தை தரணும்... பந்த் தொடர்ந்து ஆடணும்... பாண்டிங் அறிவுரை
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வயசுக்கு மீறின புத்திசாலித்தனம் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஓவர் குடி போதை.. வாகன சோதனையில் போலீசாரை எட்டி உதைத்த பெண் உதவி இயக்குனர்.. நண்பருடன் கைது!
சென்னை: குடிபோதையில் போலீசாரை உதைத்ததான் சினிமா பெண் உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லாக்டவுனுக்குப் பிறகு சென்னையில் மதுபானக் கடைகள், சொகுசு மதுபான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன.
இல்லத்தரசிகளுக்கும் சம்பளம்.. புருஷன் தரலைன்னாலும் அரசு தரணும்.. ஆட்சிக்கு வந்தா கமல் செய்வாரோ?
இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் பகுதிகளில் இரவு நேரத்தில் மது குடித்துவிட்டு கார்களில் வேகமாக செல்வது பற்றி புகார் வந்தது.

வாகன சோதனை
இதையடுத்து போக்குவரத்து போலீசார் அங்கு ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை இரவு, நீலாங்கரை போக்குவரத்து ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான போலீசார், வாகன சோதனை நடத்தினர். அப்போது திருவான்மியூர் சவுத் அவென்யூ சாலையில் ஒரு கார் வேகமாக வந்தது.

அதிக மதுபோதை
அதை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் இளைஞர் ஒருவரும் ஓர் இளம் பெண்ணும் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை.

உதவி இயக்குனர்
பின்னர், காரை ஓட்டி வந்த இளைஞர், அடையாறு பகுதியைச் சேர்ந்த டோட்லா சேஷூ பிரசாத் (27) என்பதும் இளம்பெண் அடையாறு பகுதியை சேர்ந்த காமினி என்பதும் தெரியவந்தது. காமினி, பிரபல இயக்குனர் விஷ்ணுவர்த்தனிடம், உதவி இயக்குனராக பணி புரிகிறார்.

எட்டி உதைத்தார்
போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது, அந்தப் பெண்ணும் இளைஞரும் அவர்களை ஆபாசமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர் ஆய்வாளரை காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஆய்வாளர் மாரியப்பன் திருவான்மியூர் போலீசில் புகார் அளித்தார்.

தகராறு வீடியோ
போலீசார், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். காமினி, போதையில் போலீசாரிடம் தகராறு செய்து, தரக்குறைவாக பேசி, எட்டி உதைத்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.