Don't Miss!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஓவர் குடி போதை.. வாகன சோதனையில் போலீசாரை எட்டி உதைத்த பெண் உதவி இயக்குனர்.. நண்பருடன் கைது!
சென்னை: குடிபோதையில் போலீசாரை உதைத்ததான் சினிமா பெண் உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
லாக்டவுனுக்குப் பிறகு சென்னையில் மதுபானக் கடைகள், சொகுசு மதுபான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன.
இல்லத்தரசிகளுக்கும் சம்பளம்.. புருஷன் தரலைன்னாலும் அரசு தரணும்.. ஆட்சிக்கு வந்தா கமல் செய்வாரோ?
இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் பகுதிகளில் இரவு நேரத்தில் மது குடித்துவிட்டு கார்களில் வேகமாக செல்வது பற்றி புகார் வந்தது.
வாகன சோதனை
இதையடுத்து போக்குவரத்து போலீசார் அங்கு ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை இரவு, நீலாங்கரை போக்குவரத்து ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான போலீசார், வாகன சோதனை நடத்தினர். அப்போது திருவான்மியூர் சவுத் அவென்யூ சாலையில் ஒரு கார் வேகமாக வந்தது.
அதிக மதுபோதை
அதை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் இளைஞர் ஒருவரும் ஓர் இளம் பெண்ணும் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை.
உதவி இயக்குனர்
பின்னர், காரை ஓட்டி வந்த இளைஞர், அடையாறு பகுதியைச் சேர்ந்த டோட்லா சேஷூ பிரசாத் (27) என்பதும் இளம்பெண் அடையாறு பகுதியை சேர்ந்த காமினி என்பதும் தெரியவந்தது. காமினி, பிரபல இயக்குனர் விஷ்ணுவர்த்தனிடம், உதவி இயக்குனராக பணி புரிகிறார்.
எட்டி உதைத்தார்
போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது, அந்தப் பெண்ணும் இளைஞரும் அவர்களை ஆபாசமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர் ஆய்வாளரை காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஆய்வாளர் மாரியப்பன் திருவான்மியூர் போலீசில் புகார் அளித்தார்.
தகராறு வீடியோ
போலீசார், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். காமினி, போதையில் போலீசாரிடம் தகராறு செய்து, தரக்குறைவாக பேசி, எட்டி உதைத்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.