Don't Miss!
- News சென்னையில் 3 பேர் உயிரிழந்த பப் விபத்து.. 12 பேர் மீது வழக்குப்பதிவு.. இரவோடு இரவாக போலீஸ் அதிரடி
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
செத்துடுவேன் என மிரட்டிய ரசிகை: போலீசில் புகார் அளித்த வாரிசு நடிகர்
மும்பை: தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை மீது பாலிவுட் நடிகர் வருண் தவான் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பாலிவுட்டில் பிரபலமான இளம் ஹீரோக்களில் வருண் தவானும் ஒருவர். அவர் டாப்ஸி, ஜாக்குலினுடன் சேர்ந்து நடித்த ஜுட்வா 2 படம் அண்மையில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது.
இந்நிலையில் வருண் தவானுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப்
ரசிகை ஒருவர் வருண் தவானுக்கு வாட்ஸ்ஆப்பில் ஏகப்பட்ட மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த வருண் அந்த ரசிகையின் எண்ணை பிளாக் செய்துவிட்டார்.
மிரட்டல்
எண்ணை பிளாக் செய்த பிறகு அந்த ரசிகையின் சார்பில் ஒருவர் வருணுக்கு போன் செய்து பேசியுள்ளார். நீங்கள் பதில் மெசேஜ் அனுப்பாவிட்டால் அந்த ரசிகை தற்கொலை செய்து கொள்வார் என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.
புகார்
தற்கொலை மிரட்டல் அழைப்பு வந்ததை அடுத்து வருண் பந்த்ரா சைபர் செல்லில் புகார் அளித்துள்ளார். மேலும் சான்டாக்ரூஸ் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார்.
சுவிட்ச் ஆப்
வருண் தவான் புகார் குறித்து போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். வருணுக்கு போன் செய்தவரை தொடர்பு கொள்ள முயன்றால் சுவிட்ச் ஆப் என்று வருகிறதாம்.