Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அஞ்சான் படத்துக்கு 'யு' சான்றிதழ் பெற லேப்டாப், ஐ பேடு லஞ்சம்!
மும்பை: 'அஞ்சான்' படத்துக்கு சான்றிதழ் வழங்க மடிக்கணினி மற்றும் ஐ-பேடு ஆகியவற்றை மத்திய சினிமா தணிக்கை வாரிய தலைவர் ராகேஷ் குமார் லாஞ்சம் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை சி.பி.ஐ. அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
மத்திய சினிமா தணிக்கை வாரிய ஆலோசனை குழு உறுப்பினர் சர்வேஷ் ஜெய்ஸ்வால் மற்றும் ஏஜெண்டு ஸ்ரீபதி மிஸ்ரா ஆகியோரை கடந்த 14ஆம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்திய சினிமா படங்களுக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக மத்திய சினிமா தணிக்கை வாரிய தலைவர் ராகேஷ்குமார் கடந்த 18ஆம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்
கைது செய்யப்பட்ட 3 பேரையும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரித்து வந்தனர். வெள்ளிக்கிழமையன்று அவர்கள் மும்பை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அஞ்சான் பட தணிக்கை
அப்போது நீதிபதிகள் முன்னிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில், தமிழில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘அஞ்சான்' படம் தணிக்கைக்காக கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி அவரிடம் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆறு நாட்களுக்குப்பின்
அவர் 6 நாட்கள் இருப்பில் வைத்து அதன்பின்னர்தான் அந்த படத்தை பார்த்துள்ளனர். இவ்வாறு நடைமுறைகளை முடித்த பின்னர் கடந்த 5ஆம் தேதி அஞ்சான் படத்துக்கு சான்றிதழ் வழங்கி இருக்கிறார்.
லேப்டாப், ஐ-பேட்
‘அஞ்சான்' படத்துக்கு சான்றிதழ் வழங்க ராகேஷ் குமார் ஒரு மடிக்கணினி மற்றும் ஐ-பேட் லஞ்சமாக வாங்கி இருக்கிறார்.
தெலுங்கு படத்திற்கு ரூ.50000
இது தவிர கடந்த 9ஆம் தேதி ‘சிக்கந்தர்' என்ற தெலுங்கு படத்துக்கு சான்றிதழ் வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்று இருக்கிறார்" என்று தெரிவித்தனர்.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?