Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நடிகையை அறைந்து ரத்தம் வர வைத்தவர் கமல்: சினிமா விமர்சகர் பரபர புகார்
திருவனந்தபுரம்: உலக நாயகன் கமல் ஹாஸன் வேண்டும் என்றே நடிகை கார்த்திகாவை ஓங்கி அறைந்ததால் அவரது காதில் இருந்து ரத்தம் வந்தது என பிரபல மலையாள சினிமா விமர்சகர் பெல்லிசேரி தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன், சரண்யா, ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்த படம் நாயகன். அந்த படத்தில் கமல் ஹாஸனின் மகளாக மலையாள நடிகை கார்த்திகா நடித்திருந்தார்.
கார்த்திகா நாயகன் தவிர்த்து பூவிழி வாசலிலே படத்திலும் நடித்துள்ளார்.
நாயகன்
நாயகன் படம் குறித்து பிரபல மலையாள சினிமா விமர்சகர் பெல்லிசேரி மலையாள வார இதழ் ஒன்றுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கமல் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
கமல் ஹாஸன்
நாயகன் பட போட்டோஷூட்டின்போது கமல் ஹாஸன் கார்த்திகாவின் தோளில் கை போட்டுள்ளார். இது பிடிக்காமல் அவர் கமலின் கையை தட்டியுள்ளார் என்கிறார் பெல்லிசேரி.
கார்த்திகா
கார்த்திகா கையை தட்டிவிட்டும் கமல் மீண்டும் அவரது தோளில் கை போட்டார். இதனால் கடுப்பான கார்த்திகா மீண்டும் அவரது கையை தட்டிவிட்டு என்னை யாரும் தொட்டு நடிப்பது பிடிக்காது என்று முகத்தில் அடித்தது போன்று கமலிடம் தெரிவித்தார் என்று பெல்லிசேரி கூறியுள்ளார்.
அறை
படத்தில் ஒரு காட்சியில் கமல் கார்த்திகாவை கன்னத்தில் அறைய வேண்டும். கமல் போட்டோஷூட்டின்போது நடந்ததை மனதில் வைத்து கார்த்திகாவை ஓங்கி அறைந்தார். இதில் கார்த்திகாவின் காதில் இருந்து ரத்தம் வந்தது என பெல்லிசேரி தெரிவித்துள்ளார்.
தமிழே வேண்டாம்
கமல் ஹாஸனின் செயலை பார்த்து தான் கார்த்திகா இனி நான் தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று கூறியதுடன் அதன்படியே செய்தார் என்று பரபரப்பை கிளப்பியுள்ளார் பெல்லிசேரி.