Don't Miss!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டப்பிங்கில் இருந்தபோது பாதிப்பு.. புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்றுவந்த பிரபல சினிமா இயக்குனர் மரணம்!
கொச்சி: புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த பிரபல சினிமா இயக்குனர் மரணமடைந்தார்.
Recommended Video
இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் பிரபலங்கள் உயிரிழந்து வருவது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, மலையாள சினிமா உலகில் மூத்த கலைஞர்கள் பலர் மரணமடைந்துள்ளனர்.
ஓடிடி தளத்தில் வெளியானது "மம்மி சேவ் மீ" .. ஹார்ட் பீட் பத்திரம்!
இயக்குனர் யதீன்தரதாஸ்
இப்போது மலையாள இயக்குனர் யதீன்தர தாஸ் மரணமடைந்துள்ளார். இது மலையாள திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர், இயக்குனர் பாலுமகேந்திரா, மலையாள இயக்குனர்கள் எம்.வின்சென்ட், பொற்றேகாட், சேதுமாதவன் உள்பட பல முன்னணி இயக்குனர்களுடன் பல படங்களில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றியவர்.
திரைப்பட விழா
பின்னர் கவியூர் பொன்னம்மா, வேணு நாகவல்லி, பாபு நம்பூதிரி உள்பட பலர் நடித்த 'ஊமன திங்கள்' (Oomana Thinkal) என்ற படத்தை இயக்கினார். 1983 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் கவனிக்கப்பட்டது. இதற்கு பிரபல மலையாள இசை அமைப்பாளர் எம்.பி.ஶ்ரீனிவாசன் இசை அமைத்திருந்தார். இந்தப் படம், ஜெர்மன் குழந்தைகள் திரைப்பட விழாவில் விருது பெற்றது.
மம்மூட்டி நடித்த படம்
இதையடுத்து மம்மூட்டி, நெடுமுடி வேணு, சித்ரா, சுகுமாரி, திலகன் நடிப்பில் ஒடுவில் கிட்டிய வர்தா (Oduvil Kittiya Vartha) என்ற படத்தை இயக்கினார். 1985 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படமும் அப்போது பேசபட்டது. இதையடுத்து சில படங்களை இயக்கிய இவர், பல டாக்குமென்டரி படங்களையும் இயக்கி உள்ளார். இப்போது சாய்குமார் நடிக்கும் உள்கன்னல் என்ற படத்தை இயக்கி வந்தார்.
புற்று நோய் பாதிப்பு
இந்த படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். அவர், கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மறைவை அடுத்து மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.