Don't Miss!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- Automobiles ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தமிழ் சினிமாவின் முழுமையான ஆதரவுடன் நடந்த தமிழக பந்த்! #TamilNaduBandh
தமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாது... இரண்டும் பின்னிப் பிணைந்தவை. எந்த சமூக, அரசியல் பிரச்சினையாக இருந்தாலும் சினிமா பிரபலங்களின் கருத்து, போராட்டமும் இணைந்தால்தான் முழுமை பெறும் என்ற நிலை.
பொதுவாக எதிர்க்கட்சிகள் நடத்தும் பந்த், கடையடைப்புகளில் பட்டும் படாமலும் இருந்து கொள்வது தமிழ் சினிமா வழக்கம்.
ஆனால் இது தமிழர்களின் உணர்வுப் பூர்வமான பிரச்சினை, ஜீவாதாரப் பிரச்சினையான காவிரி தொடர்புடையது என்பதால் அத்தனை சினிமா அமைப்புகளும் தங்களின் முழுமையான ஆதரவை அளித்தன.
இதற்காக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு தலைமையில் அனைத்து சங்கங்களும் ஒன்றாகத் திரண்டு, திரையுலகின் ஒட்டு மொத்த ஆதரவையும் இந்த முழு அடைப்புக்கு வழங்குவதாக அறிவித்தனர்.
அறிவித்தது போலவே, முழுமையான ஆதரவை இன்று வழங்கினர். காலை 6 மணியில் தொடங்கி மாலை 6 மணி வரை எந்த சினிமா வேலைகளும் நடக்கவில்லை.
படப்பிடிப்பு, டப்பிங், எடிட்டிங், இசைக் கோர்ப்பு என அனைத்தையும் நிறுத்தி வைத்தனர். திரையரங்குகள் அனைத்திலும் மாலை 6 மணி வரை காட்சிகள் நிறுத்தப்பட்டன. பெரும்பாலான திரைக் கலைஞர்கள், பிரபலங்கள் இன்று கருப்புச் சட்டை அணிந்து கர்நாடகத்தின் மூர்க்கத்தனத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.