Don't Miss!
- News தமிழகத்தில் குறைந்த வாக்குப்பதிவு.. "அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.." என்ன காரணம் தெரியுமா
- Sports DC vs SRH : 22 சிக்ஸ், 18 ஃபோர்ஸ்.. ஈஏ கிரிக்கெட் விளையாடிய ட்ராவிஸ் ஹெட்.. நொந்துபோன டெல்லி அணி!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
அரசு அனுமதி மறுப்பு: திருட்டு விசிடிக்கு எதிரான பேரணி, ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் ரத்து
சென்னை: திருட்டு விசிடிக்கு எதிராக திரையுலகினர் இன்று நடத்தவிருந்த பேரணி, ஆர்ப்பாட்டங்கள் கைவிடப்பட்டன.
அரசுத் தரப்பிலிருந்து திரையுலகினருக்கு எந்த அனுமதியும் கிடைக்காததாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
இந்த பேரணி, ஆர்ப்பாட்டத்தில் திரையுலகின் அனைத்து சங்கங்கள், அமைப்புகள், கலைஞர்கள் பங்கேற்பார்கள் என்று இரு வாரங்களுக்கு முன்பு நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.
இதற்கான முறையான அனுமதி கேட்டும் காவல் துறையிடம் மனு கொடுத்திருந்தனர். ஆனால் இதற்கு அனுமதி தருவது குறித்து அரசிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் இப்போது வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டதால், அமைதியாகிவிட்டதாகத் தெரிகிறது.
திருட்டு விசிடியை ஒழிக்கக் கோரி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்ற போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை திரையுலகினர் நடத்தி வந்தாலும், திருட்டு விசிடி விற்பனை மற்றும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியாவதை முழுமையாகத் தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.