Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அரசு அனுமதி மறுப்பு: திருட்டு விசிடிக்கு எதிரான பேரணி, ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் ரத்து
சென்னை: திருட்டு விசிடிக்கு எதிராக திரையுலகினர் இன்று நடத்தவிருந்த பேரணி, ஆர்ப்பாட்டங்கள் கைவிடப்பட்டன.
அரசுத் தரப்பிலிருந்து திரையுலகினருக்கு எந்த அனுமதியும் கிடைக்காததாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
இந்த பேரணி, ஆர்ப்பாட்டத்தில் திரையுலகின் அனைத்து சங்கங்கள், அமைப்புகள், கலைஞர்கள் பங்கேற்பார்கள் என்று இரு வாரங்களுக்கு முன்பு நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.
இதற்கான முறையான அனுமதி கேட்டும் காவல் துறையிடம் மனு கொடுத்திருந்தனர். ஆனால் இதற்கு அனுமதி தருவது குறித்து அரசிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் இப்போது வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டதால், அமைதியாகிவிட்டதாகத் தெரிகிறது.
திருட்டு விசிடியை ஒழிக்கக் கோரி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்ற போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை திரையுலகினர் நடத்தி வந்தாலும், திருட்டு விசிடி விற்பனை மற்றும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியாவதை முழுமையாகத் தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.