ரஜினி சொல்லிட்டார்.. மத்தவங்களால சொல்ல முடியல! - கடும் அதிருப்தியில் திரையுலகினர்

By Shankar

சென்னை: சினிமா நூற்றாண்டு விழாவில் தனக்கு நேர்ந்த அவமானத்தை ரஜினி வெளிப்படையாக சொல்லிவிட்டார். மற்றவர்களால் சொல்ல முடியவில்லை என்று விழாவில் பங்கேற்ற பலரும் முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்திய சினிமா நூற்றாண்டு விழா குறித்த விமர்சனங்கள் இப்போது பரபரப்பாக மீடியாவில் வர ஆரம்பித்துள்ளன.

இதை மேலும் பரபரப்பாக்கியுள்ளது திமுக தலைவர் கருணாநிதியின் அறிக்கை. அந்த அறிக்கையில் தன் விமர்சனத்தை விட, பத்திரிகைகளில் வந்த விமர்சனங்களை ஹைலைட்டாக்கியுள்ளார் கருணாநிதி. அதுமட்டுமல்ல, செய்தியை எழுதியவர்களை பெயரைக் கூட அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து சினிமா உலகைச் சேர்ந்த, விழாவில் புறக்கணிக்கப்பட்ட முக்கியமானவர்கள் பலரும் அடுத்து என்ன செய்வது என கூடிப் பேசி வருகிறார்கள்.

விழாவில் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து ரஜினி நண்பர்களிடம் வருத்தப்பட்டுப் பேசியது செய்தியாக வெளியான பிறகு, இதே நிலைக்கு ஆளான மற்ற கலைஞர்களும் வாய் விட்டுப் புலம்பி வருகிறார்கள். "அவராவது பரவால்ல, வாய்விட்டு சொல்லிவிட்டார். நாம பேசுனா... அதையும் யாராவது போட்டுக் குடுத்துட்டா என்ன பண்றது" என்றாராம் அந்த சாதனை நடிகர்.

Indiann cinema Award

இந்த நிகழ்வுகள் குறித்து ஒரு கூட்டறிக்கை வெளியிடலாமா என்ற யோசனையும் உள்ளதாம்.

ஆனால், அடுத்த ஆட்சி மாற்றம் வரை அமைதியாகப் போகலாம். அரசு நிதியை கை நீட்டி வாங்கிய பின் கோபப்படுவதில் அர்த்தமில்லை என்று முதல்வருக்குப் பக்கத்து இருக்கைகளில் உட்கார்ந்திருந்த தயாரிப்பாளர்கள் இருவர் அதிருப்தியாளர்களை அமைதிப்படுத்தி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X