பணிப்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சினிமா தயாரிப்பாளர் கைது
நொய்டா: நொய்டாவில் தன் வீட்டில் வேலை செய்த பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நொய்டாவில் இருக்கும் செக்டர் 15 இ-பிளாக்கில் வசித்து வருபவர் ராஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). சினிமா படம், தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வருகிறார்.

அவர் தனது வீட்டில் வேலை செய்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளார். வெளியே யாரிடமாவது சொன்னால் எம்எம்எஸ் வீடியோவை வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி வந்துள்ளார்.
அந்த பெண் தனக்கு நடந்த கொடுமை பற்றி தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் நேராக காவல் நிலையம் சென்று தயாரிப்பாளர் மீது புகார் அளித்தார்.
அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தயாரிப்பாளரை கைது செய்தனர்.
Comments


Click it and Unblock the Notifications