Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாழ்வை மாற்றிய கொடூர கொரோனா வைரஸ்.. பிரியாணி வியாபாரியாக மாறிய பிரபல சினிமா பட தயாரிப்பாளர்!
கொச்சி: கொரோனா கொடுமை காரணமாக சினிமா தயாரிப்பாளரின் வாழ்க்கை மாறியதால் அவர் பிரியாணி விற்று வருகிறார்.
கொரோனா வைரஸால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
6 மாதமாக கோவிட்19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அட்மிட்
சம்பள குறைப்பு
பலர் வேலை இழந்திருக்கிறார்கள். வேலையில் இருப்பவர்கள் சம்பள குறைப்பை சந்திக்கிறார்கள். பலர் கையிருப்பை கரைத்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என காத்திருக்கிறார்கள். வாழ்வைப் புதிதாகத் தொடங்குவது போல, தொடங்கி இருக்கிறார்கள், பலர். நிலைமை சுமூகமாக இன்னும் சில மாதங்கள் ஆகலாம். பலர் இன்னும் போராடி வருகின்றனர்.
காய்கறி விற்பனை
இதற்கிடையே சினிமா, சின்னத்திரையை நம்பி இருக்கும் சில இயக்குனர்கள், துணை நடிகர்கள் கடும் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். பலர் தங்கள் தொழிலை மாற்றி உள்ளனர். பல இந்தி நடிகர்கள், இயக்குனர்கள் காய்கறி விற்று வருகின்றனர். இதுபற்றிய செய்திகள் அவ்வப்போது வந்தவண்ணம் உள்ளன.
ஜாபர் கஞ்சிரப்பள்ளி
இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் ஒருவரை கொரோனா பிரியாணி வியாபாரத்துக்கு மாற்றி இருக்கிறது. பிரபல மலையாள தயாரிப்பாளர், ஜாபர் கஞ்சிரப்பள்ளி. இவர் ஷகிலா நடித்த நீலக்குறிஞ்சு பூத்து உள்பட சுமார் 9 படங்களை தயாரித்தவர். கொரோனாவால் இவர் வாழ்க்கையும் மாறிவிட்டது.
பிரியாணி பிசினஸ்
பொருளாதர நெருக்கடி அதிகரிக்க, சின்னதாக ஓட்டல் தொடங்கினார். அடுத்து பிரியாணி பிசினஸிலும் இறங்கிவிட்டார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: கொரோனாவால் சினிமா துறை மொத்தமாக பாதிப்பை சந்தித்துள்ளது. நான் உள்பட சினிமாவை சேர்ந்தவர்களில் பலருடைய வாழ்க்கை மாறிவிட்டது.
திரைப்பட தொழிலாளர்
இந்நிலையில் கேரளத் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு கூட்டமைப்பு உணவு வினியோகம் செய்யக் கூறியது. அதனால் ரூ.20-க்கும் குறைவான விலையில் உணவு தயாரித்து கொடுக்கத் தொடங்கினேன். அதன் தொடர்ச்சியாக பிரியாணி விற்று வருகிறேன். ஆரம்பத்தில் தடுமாற்றமாக இருந்தது. பிறகு வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.
மூவாயிரம் பிரியாணி
முதலில் ரூ.29-க்கு பிரியாணி விற்றேன். முதல் நாளில் மூவாயிரம் பிரியாணி விற்றது. இப்போது 49 ரூபாய்க்கு விற்று வருகிறேன். தினமும் மூவாயிரம் பிரியாணி தயாரித்து வருகிறேன். என் மனைவி எனக்கு உதவுகிறார். வேலைக்கு இரண்டு பேரை வைத்திருக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்